கரோனாவுக்குப் பிறகு இந்தியாவில் வேலைச் சூழல் மிகப் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஊழியர்கள் ஊதியத்தைவிடவும் வேலையில் நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக, வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊழியர்கள் பெரும் வாய்ப்பாக பார்க்கின்றனர். நிரந்தரமாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் வாரத்துக்கு இருதினங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். தினமும் அலுவலகத்துக்கு வர வேண்டிய நிர்பந்தம் இல்லாமல், விரும்பிய நாட்களில் வீட்டிலிருந்தும் தேவைப்படும் நாட்களில் அலுவலகத்துக்கு வந்தும் வேலை பார்ப்பது ஹைபிரிட் மாடல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வாய்ப்பை வழங்காத நிறுவனங்களிலிருந்து ஊழியர்கள் வெளியேறுவது அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இது ஒரு போக்காக உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வீட்டிலிருந்து பணிபுரிவது ஊழியரின் அடிப்படை உரிமை என்று கூறி அதை சட்டமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது நார்வே. சமீபத்தில் பிரதமர் மோடி வீட்டிலிருந்து பணிபுரிதலின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். பெண்கள் வேலைவாய்ப்புச் சூழலில் பங்கேற்பதற்கு இத்தகைய நெகிழ்வுத் தன்மைகள் முக்கியமான காரணிகளாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். ஹைபிரிட் மாடலை எல்லா நிறுவனங்களும் ஆதரிக்கின்றனவா? நிச்சயம் இல்லை. ஹைபிரிட் மாடலுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. ஹைபிரிட் மாடலால் ஊழியர்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதாக அந்த நடைமுறையை எதிர்க்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.உலக அளவில் ஹைபிரிட் மாடல் குறித்த விவாதம் தீவிரமடைந்திருக்கும் இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சில ஊழியர்களிடமும், நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளிடமும் பேசினோம்…
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago