ஊதுபத்தி தயாரிப்பில் என்ன வருமானம் கிடைக்கும்? அதைத் தொழிலாக எடுத்துச் செய்ய முடியுமா என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால் கிரிதரன் அனு பவத்தை கேட்ட பிறகு அந்த தொழிலின் மீதான பார்வையை மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். அகர்பத்தி தொழில் நிமித்தம் சீனாவுக்கும், வியட்நாமுக்கும் அடிக்கடி சென்று வருவதாக குறிப்பிட்டு ஆச்சரியப்படுத்துகிறார். அவரது அனு பவத்தை இந்த வாரம் ``வணிக வீதி’’-க் காக பகிர்ந்து கொண்டதிலிருந்து…
ஊதுபத்தி தயாரிப்பு என்றால் குடிசைத் தொழில் அல்லது சைக்கிள் பிராண்ட் போல பெரிய மார்க்கெட்டிங் நெட்வொர்க்கை கொண்டிருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணம்தான் எனக்கும் இருந்தது. இந்த தொழிலில் இறங்கிய பிறகுதான் மிகப் பெரிய வாய்ப்புகளை கொண்டுள்ள துறை என்பதை தெரிந்து கொண்டேன். ஏனென்றால் இந்தியாவின் ஊதுபத்தி தேவை மாதத்துக்கு 30 ஆயிரம் டன், அதில் 40 சதவீதம்தான் இங்கு தயாரிக் கப்படுகின்றன. 60 சதவீத தேவைகளுக்கு வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்கி றோம். இதைத் தெரிந்து கொண்ட பிறகு முயற்சிகள் செய்யாமலிருந்தால் எப்படி? அதனால்தான் வியட்நாமுக்கும் சீனாவுக் கும் பயணம் செய்கிறேன் என்றார்.
அப்பா காலத்தில் கல் அரவை இயந்திரம் வைத்திருந்தோம். எதிர்பாராத நேரத்தில் அவரது இறப்பின் காரணமாக அந்த தொழிலில் நான் இறங்கினேன். ஆனால் அதைத் தொடர முடியவில்லை. வேறு தொழில் தொடங்க வேண்டும் என்கிற நிலையில்தான் ஊதுபத்தியை இயந்திரம் மூலம் தயாரிக்கலாம் என கேள்விபட்டேன். திருப்பத்தூரில் ஒரு வரிடம் இருப்பதாக அறிந்து அங்கு சென்றால், அவர்களோ நிறுவனத்துக் குள்ளே விடவில்லை. இயந்திரத்தை நான் பார்த்து விடக்கூடாது என்பதிலேயே கவனமாக இருந்தனர்.
இணையம் மூலம் இயந்திரத்தை தேடி சீனாவிலிருந்து ரூ.85 ஆயிரம் விலையில் இரண்டு இயந்திரங்களை வரவழைத் ததுடன் அதற்கான மூலப் பொருட்களை யும் வாங்கினேன். ஆரம்பத்தில் சோதனைக் காக வாசனை சேர்த்த ஊதுபத்திகளை செய்து பார்த்தேன். ஒரு முயற்சிக்காக மைசூரில் உள்ள சைக்கிள் பிராண்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் வாசனை சேர்க்காத ஊதுபத் திக்கு ஆர்டர் கொடுத்ததுடன் உற்சாகப் படுத்தவும் செய்தனர். அதற்கு பிறகு எந்த வாசனையும் சேர்க்காத ஊதுபத்திகளை தயாரித்து நிறுவனங்களுக்கு கொடுக்கத் தொடங்கினேன்.
ஊதுபத்திக்கான முக்கிய மூலப் பொருள் மூங்கில் குச்சி. எனக்கு இதன் தேவை அதிகரிக்க அதை வாங்கவும், வாங்கி விற்கவும் உற்பத்தியாளர்களிடமே நேரடியாக சென்று வாங்குவதற்காக சீனா செல்ல முடிவெடுத்தேன். அலிபாபா மூலம் சீனாவில் ஒரு தொடர்பு கிடைத்தது. அவர் உற்பத்தியாளர் என நம்பி சென்றேன். ஆனால் அவரோ வாங்கி விற்கும் வர்த்தகர் என்பது அங்கு சென்ற பின்னர்தான் தெரிந்தது. பிறகு நானே தேடி அலைந்து ஒரு கிராமத்தில் வாங்கினேன். கண்டெய்னரில் ஏற்று வதற்கு முன்பே பணத்தை கொடுத்தால் ஏமாற்றிவிடுவார்கள் என்பதால், வேலை ஆட்கள் கிடைக்காத நிலையில் நானே பார்சல்களை ஏற்றினேன். ஆனால் அப்படி வாங்கி வந்த குச்சிகள் தரமற்றவை என்பது இங்கு வந்த பிறகு தெரிய வந்தது. இந்த அனுபவம் நிறைய கற்றுக் கொடுத்தது. ஆனால் வியட்நாமில்தான் இதை அதிகம் தயாரிக்கிறார்கள் என்ப தால் அங்கிருந்து வாங்கத் தொடங்கி னேன். நான் தயாரித்தது போக, மூலப் பொருட்களை பிறருக்கும் விற்கத் தொடங் கினேன். தவிர இயந்திரங்களையும் என் மேற்பார்வையில் தருவித்துக் கொடுக் கிறேன்.
ஊதுபத்தி குச்சிகளை பாதுகாப்பது ரொம்ப முக்கியம். ஏனென்றால் மழைக் காலங்களில் வீணாகிவிடும். இதனாலும் பல லட்ச ரூபாய் எனக்கு இழப்பு ஏற்பட் டுள்ளது. ஊதுபத்தி தொழிலை அன்றாட வருமானத்துக்கும் செய்யலாம், புதிய முயற்சிகளில் இறங்கினால் கோடிகளிலும் சம்பாதிக்கலாம். பலர் சிறிய அளவில் செய்வதாலும், இடைத் தரகர்களிடம் கொடுப்பதாலும் நஷ்டம் அடைகின்றனர். ஆனால் சிறிய அளவில் செய்பவர்கள் ஒருங்கிணைந்து மொத்தமாக கொடுத் தால் நிறுவனங்கள் வாங்க தயாராக இருக்கின்றன. இதை புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் சொல்லிவிடு வேன். இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்நாட்டு உற்பத்தியை அரசும் ஊக்குவிக்க வேண்டும்.
இப்போது 40 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை அளித்துள்ளேன். மறைமுக மாக பல தொழில் முனைவோர்களுக்கும் உதவிகரமாக இருந்து வருகிறேன். அடுத்தாக உடல் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விதமாக அவர்கள் இயக்கக்கூடிய இயந்திர வடிவமைப்பைக் கொடுத்துள்ளேன். இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. தெய்வீக தொழில் இது, துணிந்து இறங்கினால் வெற்றி நிச்சயம்.
தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
17 mins ago
க்ரைம்
23 mins ago
க்ரைம்
32 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago