மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகம் விரும்பப்படும் மாடலான செலெரியோ தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ளது.
இதன் அடிப்படை மாடலான எல்எக்ஸ்ஐ-யின் விலை ரூ.4.31 லட்சமாகும். பிரீமியம் மாடல் விலை ரூ.5.48 லட்சத்தைத் தொடுகிறது.
கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இந்த மாடலில் ஏபிஎஸ் மற்றும் இபிடி வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் அலெர்ட் சிஸ்டம், டிரைவர் மற்றும் முன் இருக்கை பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை அறிவுறுத்தும் வார்னிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார் ஆகியன இதில் இடம்பெற்றுள்ளன.
ஹேட்ச்பேக் மாடலான இந்தக் காரில் வேறெந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. டிரைவருக்கு மட்டும் ஏர்பேக் வசதி உள்ளது. இந்த கார் 68 ஹெச்பி, 1 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டது.
இதில் சிஎன்ஜி பொருத்தப்பட்ட மாடலும் கிடைக்கிறது. 5 கியர்கள் கொண்ட மானுவல் மற்றும் ஏஎம்டி வசதி கொண்ட காரும் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடலில் மானுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட கார் மட்டுமே கிடைக்கிறது.
தற்போது செலெரியோ மற்றும் செலெரியோ எக்ஸ் ஆகிய மாடல்கள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களோடு வந்துள்ளன. ஏற்கெனவே இந்நிறுவனம் எக்கோ, டீசலில் இயங்கும் சியாஸ் உள்ளிட்ட கார்களையும் இவ்விதம் மேம்படுத்தி அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
5 mins ago
உலகம்
15 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
35 mins ago
இந்தியா
39 mins ago
வாழ்வியல்
49 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago