பருவநிலை மாற்றம் அதன் கொதிநிலைக்கு அருகே நெருங்கிவிட்ட சூழலில், இன்று உயிரினச் சூழலுக்கு ஒவ்வாத பல செயல்கள் விரைந்து முடுக்கம் பெற்றுள்ளன. அவற்றுள் உயிரினங்களின் அற்றுப்போதலும் (Extinction) ஒன்று. இன்று கிட்டத்தட்ட 10 லட்சம் வகை சிறப்பினங்கள் முற்றிலும் அழியும் தறுவாயில் உள்ளன. சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 500 ஆண்டுகளில், 844 விலங்குகளும் தாவரங்களும் முற்றிலும் அற்றுப்போய்விட்டன. அவற்றில் கீழ்க்கண்ட ஆறு உயிரினங்கள் சமீபத்தில் அற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளன. நம் வாழ்நாளில், நம் கண்முன்னே அற்றுப்போன உயிரினங்கள் இவை:
1. பிண்டா ஆமை: ஈக்வடார் நாட்டில், பசிபிக் பெருங் கடலில் ஓடும் பூமத்திய ரேகையின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் தீவுக் கூட்டமே கலபகாஸ். ஒரு கோடியே, நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்பிலிருந்து உருவான தீவுக் கூட்டம் இது. உலகிலேயே தனித்துவ மான உயிரியல் வாழ்க்கையும், பூகோள வரையறை களையும் கொண்ட இதன் நிலப்பரப்பே மனித இன மர்மங்களை பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வினுக்கு விளக்கியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago