நான்கு மாதக் காலத்தில் புதர்கள், நீரோட்டங்கள், நீர்நிலைகளைப் பற்றி நேரடி அவதானிப்பு மூலம் திருவண்ணாமலை மருதம் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொண்டோம். ஆண்டுதோறும் மேற்கு மலைத் தொடருக்கு ஒரு முறை சென்றுவருவோம். மேற்கண்ட அவதானிப்புக்குப் பிறகு, மேற்கு மலைத் தொடர் பயணத்திற்கு உற்சாகமாகத் தயாரானோம். அங்கே செல்வதன் முக்கிய நோக்கம், அந்த இயற்கை எழிலில் மூழ்கி இயற்கையுடன் உறவை வலுப்படுத்திக்கொள்வது மட்டுமல்லாமல் இயற்கையின் வெவ்வேறு அங்கங்களைப் பற்றிக் கற்றுகொள்வதும்தான்.
வழக்கமாகப் பறவைகளை நோக்குவதிலும் பறவையினங் களை அடையாளம் காண்பதிலும் நிறைய நேரத்தைக் கழிப்போம். அதில் ஓரளவுக்குத் தேர்ச்சி பெற்ற பின் பூச்சிகளைப் பற்றிக் கற்றோம். பிறகு கற்றலை ஆழப்படுத்தி ஒவ்வொரு உயிரினமும் இயற்கையில் வகிக்கும் முதன்மைப் பங்கையும், தொடர்புகளையும் கவனிக்க ஆரம்பித்தோம். இயற்கையின் மர்மங்களும் புதிர்களும் சிறிது சிறிதாகப் புலப்பட ஆரம்பித்தன. இந்த முறை இன்னும் ஓர் அம்சத்தையும் எங்களின் கற்றலில் சேர்த்துக்கொண்டோம்: அது மரங்களை அடையாளம் காண்பது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
16 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
1 min ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
10 hours ago
சினிமா
11 hours ago