கிழக்கில் விரியும் கிளைகள் - 24: மயக்கும் மகிழ மணம்

By கு.வி.கிருஷ்ணமூர்த்தி

மகிழம், ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மரம். இந்து, புத்த, சமண மத மக்களுக்கு இது புனித மரம். இந்து மத வழக்கத்தின்படி சிவபெருமானுக்கு உரிய மரம். எனவே, சிவத்தலங்களில் இது பரவலாக வளர்க்கப்படுகிறது (பெரும்பாலும் தலமரமாக); அதன் காரணமாக இதன் பூ `சிவமல்லி’ என்றும் அழைக்கப்படுகிறது. `வகுளா’, `பகுளா’ என்பவை சிவபெருமானின் வேறு பெயர்கள். மகிழ மரம் முருகன், திருமாலுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

ஆன்மிக முக்கியத்துவம்

திருப்புனவாசல், திருஇராமனதீச்சரம், திருவண்ணாமலை, திருக்கண்ணன்குடி, திருக்கண்ணமங்கை, திருநீடூர், திருநறையூர், திருவொற்றியூர், திருவெஃகா ஆகிய கோயில்களில் மகிழ மரம் தல மரமாகக் காணப்படுகிறது. திருக்கண்ணன்குடியில் காலை, மாலை பூஜைகளிலும், திருக்கண்ணமங்கையில் மார்கழி மாத உற்சவத்துக்குப் பின்பு பத்து நாட்களுக்கு மாலை பூஜைகளிலும் மகிழம் பூ முக்கியத்துவம் பெறுகிறது. கேரளத்தின் சில சிவன் கோயில்களில் (வடக்கும்நாத க்ஷேத்திரத்தில்) பூரம் திருவிழா இந்த மரத்தின் அடியில் நடைபெறுகிறது. சந்திரமுகன் என்ற யக்ஷன் இந்த மரத்தில் உறைந்து காணப்படுவதாகக் கருதப்படுகிறது. மகிழம் பூ நம்மாழ்வாருக்கு உரிய சிறிய பூ என்பதை அவரே “… வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” (திருவாய்: 4: 10, 11) என்று பாடியுள்ளார்.

புத்தரோடு தொடர்புடைய ஏழு புனித மரங்களில் மகிழமும் ஒன்று. சாஞ்சி, அமராவதித் தூண்களில் பூக்களுடன் கூடிய மகிழ மரங்கள் காட்டப்பட்டுள்ளன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. சமணர்களுக்கும் மகிழம் ஒரு புனித மரமே. சமணத் தீர்த்தங்கரர்களில் ஒருவரான நேமிநாதரின் முத்திரையாக மகிழம் திகழ்கிறது. அவர் இந்த மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.

மகிழ மரத்தின் பயன்கள்

மகிழம் மிகவும் பயன் தரும் ஒரு மரம். மகிழ மரத்தின் வெவ்வேறு உறுப்புகள் பயன் நல்குகின்றன. மகிழம் பூவின் போதையூட்டும் மணம் (பல உயர்ரகச் சாராய வகைகளைப் போன்று) ஆண், பெண் இருவரிடமும் வயாக்ரா போலக் காம உணர்வைத் தூண்டுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மதுர ரசத்தில் கோரைக்கிழங்கு, முள்முருக்கு பூக்கள், நந்தியாவட்டை பூக்கள் அல்லது இலை சாற்றைக் கலந்து, அதில் மகிழ மரப் பூக்களை இட்டுப் பின்பு கொழுப்பு, பால், கோஷ்டம் ஆகியவற்றைக் கலந்தால் மகிழம்பூவின் இயல்பு மணம் மேலும் பெருகும் என்று விருக்ஷாயுர்வேதம் நூலில் சுரபாலர் குறிப்பிட்டுள்ளார்.

(அடுத்த வாரம்: ஆக்சிஜன் அமுதசுரபி)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

39 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்