சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

ஜூன் 5: கரோனா காரணமாக பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

ஜூன் 5: உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனை யான ஜப்பானின் நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரி லிருந்து மனநலப் பிரச்சினைகள் காரணமாக இடையிலேயே விலகினார்.

ஜூன் 5: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பொறுப்பேற்றார்.

ஜூன் 6: ஆசிரியர் தகுதித் தேர்வின் (டெட்) சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்தது.

ஜூன் 6: எட்டு அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 முதல் மீண்டும் தொடங்கும் என்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் 14 அணிகளும், டி20 உலகக் கோப்பையில் 20 அணிகளும் பங்கேற்கும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.

ஜூன் 7: நாவல் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைத் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

ஜூன் 8: தமிழக இந்து சமய அறநிலையத் துறை அலுவலகக் கோப்புகள், கோயில் சொத்துகள் ஆகியவற்றை டிஜிட்டல் மயப்
படுத்தும் பணிகள் தொடங்கின.

ஜூன் 8: மத்திய அரசு வெளியிட்ட எத்தனால் கொள்கையில், 2025-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலைக் கலந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஜூன் 9: 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்