நவ. 12: பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா காலமானார். உலகில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் இவர். 1971-ம் ஆண்டிலிருந்து இந்தப் பதவியை அவர் வகித்துவந்தார்.
நவ. 13: நகோர்னோ - காராபாக் பிராந்தியத்தில் நடந்துவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஆர்மீனியாவும் அஸர்பைஜானும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த சமாதானத் திட்டத்துக்கு ரஷ்யா ஏற்பாடுசெய்திருந்தது.
நவ. 15: இணையதள செய்திகள், திரைப்படங்கள், காணொலி நிகழ்ச்சிகள் ஆகிய டிஜிட்டல் சேவைகள் மத்திய செய்தி - ஒளிபரப்பு அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
நவ. 15: அயோத்தியின் ‘தீப உற்சவம்’ கொண்டாட்டம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்தக் கொண்டாட்டத்துக்காக சரயு ஆற்றங்கரையில் 5,84,572 விளக்குகள் ஏற்றப்பட்டன.
நவ. 16: பிஹார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். பிஹார் மாநிலத்தின் முதல்வராக ஏழாவது முறையாகவும் தொடர்ச்சியாக நான்காவது முறையும் அவர் பொறுப்பேற்றார்.
நவ. 17: தமிழ்ப் பதிப்புலகின் முன்னோடி ‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார். தற்காலத் தமிழ் அகராதி உள்பட பல்வேறு நூல்களைப் பதிப்பித்து தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன்.
நவ. 19: மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் சிபிஐ விசாரணை நடத்தும்போது மாநில அரசின் ஒப்புதல் கண்டிப்பாகத் தேவை. ஒப்புதல் இல்லாமல் விசாரணை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
நவ. 19: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 6.10 கோடி. இதில் ஆண் வாக்காளர்கள் 3.01 கோடி; பெண் வாக்காளர்கள் 3.09 கோடி. மாற்றுப் பாலின வாக்காளர்கள் 6,385. வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகத்தின் மிகப் பெரிய சட்டப்பேரவைத் தொகுதி சோழிங்கநல்லூர் (6.53 லட்சம் வாக்காளர்கள்), சிறிய தொகுதி கீழ்வேளூர் (1.73 லட்சம் வாக்காளர்கள்)
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 mins ago
க்ரைம்
3 mins ago
இந்தியா
17 mins ago
சுற்றுலா
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago