ப
தினான்காவது இந்தியக் குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வசிப்பதற்காக உருவாக்கப்பட்ட மாளிகை, ராஷ்டிரபதி பவன். அடுத்த ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் வீடு இதுதான். நாட்டின் முதல் குடிமகன் வசிக்கும் இந்த பிரம்மாண்ட மாளிகைக்கு 100 ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாறு உண்டு.
அன்றைய கல்கத்தாவிலிருந்து, டெல்லிக்குத் தலைநகரை மாற்ற ஆங்கில அரசு தீர்மானித்தது. இங்கு கவர்னர் ஜெனரல் இல்லத்தை மிகப் பெரியதாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 4,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 1912-ம் ஆண்டு இந்தப் பிரம்மாண்டமான மாளிகையின் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியின்போது, கவர்னர் ஜெனரலுக்கான இல்லமாகத்தான் இது கட்டப்பட்டது. இந்த இல்லம் கட்டி முடிக்க 17 ஆண்டுக் காலம் பிடித்தது. 1929-ம் ஆண்டு பணிகள் நிறைவுற்றன. இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் சுமார் பத்தொன்பதாயிரம் சதுர அடிகளில் இந்த அழகிய கட்டிடத்தை வடிவமைத்தவர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர்.
இந்தக் கட்டிடம் கட்டுவதற்காக 700 மில்லியன் செங்கல்களும் 30 லட்சம் கன அடி கற்களும் பயன்படுத்தப்பட்டன. சிறிய அளவில் இரும்பும் பயன்படுத்தப்பட்டன. இந்தக் கட்டிடம் கட்ட இந்து, புத்த, சமண மதக் கோயில்களின் வடிவங்கள் மாதிரியாகக் கொள்ளப்பட்டன. மட்டுமல்லாது ராஜஸ்தான் அரண்மனைகளின் கட்டிடப் பாணியும் ஒரு மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
குடியரசுத் தலைவரின் இல்லமான இதில் மொத்தம் 340 அறைகள் உண்டு. கூடம், விருந்தினர் அறைகள், அலுவலக அறைகள் குடியரசுத் தலைவரின் குடும்பத்தினர் தங்கும் அறைகள் ஆகியவையும் இதில் அடக்கம். இந்த வளாகத்துள் குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்கள் உட்பட அலுவலக அதிகாரிகளும் குடியிருப்பர். உலகத் தலைவர்களின் பெரிய குடியிருப்புகளில் ராஷ்டிரபதி பவனும் ஒன்று. இதன் பின் பகுதியில் மிகப் பெரிய மொகல் கார்டன் உள்ளது. துலிப் மலர்கள் இந்தத் தோட்டத்தில் பூத்துக் குலுங்குகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago