தாயைத் தெய்வமாய் வணங்கும் நமது பண்பாட்டில் ஆண்கள் தங்களுக்கு இணையாக வரும் பெண்ணும் தாய் போலவே தன்னைக் காக்க வந்தவள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ‘ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பான். பக்குவமா சொல்லி நீதான் உன் வழிக்குக் கொண்டு வரணும்’ என்று பெண்களிடம் அநியாயமான எதிர்பார்ப்பு திணிக்கப்படுகிறது. ஆண் மனம் கோணாதபடி அவனது குறை களைச் சொல்லித் திருத்த வேண்டும் என்று பெண்களுக்கென்று மட்டும் சிறப்புச் சட்டம் ஏதும் இல்லையே.
அலுவலக வாட்ஸ் அப் குழுவில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் ஆபாசத் துணுக்கு ஒன்று பகிரப் பட்டது. கருத்து முரண்களையும் மறந்து பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக வெகுண்டெழுந்தனர். துணுக்கை அனுப்பிய நபர் தன் செய்கைக்கு விளக்கமளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையாகப் பெண்களிடையே முடிவு செய்யப்பட்டது. இதை ஆண்கள் உடனடியாக மறுத்தார்கள். வேறு குழுமத்துக்கு அனுப்ப நினைத்தது மாறிவிட்டதாகவும், அவர் தன் செயலுக்கு மிகவும் வருந்துவதாகவும் உப்புசப்பற்ற காரணங்களைப் பிற ஆண்களே அடுக்கினார்கள். அவர்கள் பேசப் பேசப் பெண்கள் அணியிலிருந்து பலரும் தங்கள் நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டதும் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என்கிற எங்கள் தீர்மானம் வலுவிழந்ததும் அதிர்ச்சியாகவே இருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago