உத்தராகண்ட் மாநிலச் சட்டமன்றத்தில் பிப்ரவரி 6 அன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய பிரிவில் திருமணம் புரிந்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கு (லிவ் இன் ரிலேஷன்ஷிப்) விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் விவாதத்தை எழுப்பியுள்ளன. திருமணம் புரிந்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதி, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் பதிவு செய்யத் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதம் கழித்தும் பதிவு செய்யாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது ஆறு மாதச் சிறைத் தண்டனையாகவோ 25 ஆயிரம் ரூபாய் அபராதமாகவோ இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணம் புரிந்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதைப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது அந்த உறவைத் திருமணம் என்கிற வரையறைக்குள் தள்ளுவதைப் போன்றது. திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் சட்டரீதியான சடங்குரீதியான நடைமுறைகள் எதுவும் இன்றித் திருமணம் புரிந்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை அங்கீகரித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது மசோதாவின் இந்த நிபந்தனை எனவும் விவாதம் எழுந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago