இரண்டாவது அலையில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் சீனிவாசனும் ஒருவர். 70 வயதான சீனிவாசனின் குடும்பத்தில் அவரைத் தவிர மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். ‘அது வெறும் தண்ணீர்’ என்று சீனிவாசன் மட்டும் போட்டுக்கொள்ளவில்லை. யார் யாரோ சொல்லிப் பார்த்தும் பலனில்லை. இத்துணைக்கும் அவர், அரசுத் துறையில் உயர் பொறுப்பில் பணி செய்து ஓய்வு பெற்றவர். சர்க்கரையும் 500க்கு மேல். உணவுக் கட்டுப்பாடும் இல்லை. சரியான மருத்துவமும் கிடையாது. வெளியில் சென்றால் முகக்கவசமும் போடுவதில்லை. ஏற்கனவே சர்க்கரை நோயாளி. இதில் பாதுகாப்பு வழிமுறைகளையும் சரிவரப் பின்பற்றுவதில்லை என்பதால் தொற்று எளிதில் தொற்றிக் கொண்டது.
ஒரு வாரத்தில் நிலைமை மோசமடைந்தது. மருத்துவமனைக்குச் சென்றால் கரோனா நோயாளியாக ஆகிவிடுவோமோ என்று பயந்து செல்லவில்லை. ஆனால் டெஸ்ட் பார்த்ததில் ‘பாஸிட்டிவ்’ என்று வந்ததும் கொஞ்சம் பயந்தார். மறுநாள் இரவு ஆக்சிஜன் படுக்கை தேவைப்படும் நோயாளியாக அவர் மாறியபோது மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் இடமில்லை. அரசு மருத்துவமனையிலும் ஏமாற்றமே. எப்படியோ 24 மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் இடம் கிடைத்துச் சேர்ந்தாலும் மிகத்தாமதமான நிலையில், பக்க விளைவுகள் கடுமையாகி விட்டதால் இறுதிக்கட்ட போராட்டம் பலன் தராமல் போய்விட்டது. ‘தடுப்பூசி போட்டிருந்தாலாவது காப்பாற்றி இருக்கலாமே. அதற்கும் வாய்ப்பு கொடுக்காமல் போய்விட்டாரே’ என்று வீட்டார் இனி வருந்தி என்ன பயன்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago