‘இனிப்பான’ வாழ்வுக்குப் பத்து கட்டளைகள்

By சி.ஹேமானந்த பாரதி

நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 கட்டளைகள்:

1. நீரிழிவு முற்றிலும் குணமாகாது என்பதால் மாத்திரை, ஊசியோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

2. மாதம் ஒருமுறை சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் ரத்தப் பரிசோதனை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தச் சர்க்கரை சராசரி அளவு சோதனை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஈ.சி.ஜி., நெஞ்சு எக்ஸ்ரே மற்றும் கண் பரிசோதனை போன்ற தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

3. சுய மருத்துவம் கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

4. அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

5. மாவுச்சத்தைத் தவிர்த்து நார்ச்சத்து உணவை அதிகரிக்க வேண்டும்.

6. பழங்களில் முக்கனியைத் தவிர்த்துக் கொய்யா, நாவல், பப்பாளி, அத்தி அதிகம் சேர்க்க வேண்டும்.

7. கீரைகளில் முருங்கை, அகத்தி, மணத்தக்காளி அதிகம் சேர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பாலக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

8. சிறு தானியங்களைச் சிதைக்காமல் உண்ண வேண்டும். கூழ், களி தவிர்க்கவும்.

9. உணவுத் தட்டில் காய்கறிகளும் பழங்களும் அதிகமாகவும் சாதம் குறைவாகவும் இருப்பது மிக அவசியம்.

10. தினசரி இரண்டு துண்டு பூண்டை, சாப்பாட்டுடன் சாப்பிட மாரடைப்பு மற்றும் கொழுப்பைத் தவிர்க்கலாம். கொடியில் வளரும் அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடலாம்.

நன்றி: கோவில்பட்டி நீரிழிவு மருத்துவ நிபுணர் டாக்டர் இ.சா. தங்கப்பாண்டியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 secs ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

5 mins ago

தொழில்நுட்பம்

9 mins ago

தமிழகம்

13 mins ago

ஜோதிடம்

23 secs ago

சினிமா

21 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

35 mins ago

வணிகம்

41 mins ago

இந்தியா

44 mins ago

மேலும்