என் கணவருக்கு அடிக்கடி வயிற்றில் வலி வருகிறது. அப்போதெல்லாம் ஏதாவது ஒரு அல்சர் மாத்திரையைச் சாப்பிடுகிறார். மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கச் சொன்னால் “அல்சருக்கெல்லாம் எதற்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும்?” என்று பதில் கேள்வி கேட்கிறார். வயிற்றில் வலி வந்தால், அது அல்சராகத்தான் இருக்குமா?
இப்படிச் சொல்வது சரியில்லை. வயிற்றில் வலி வருவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் உண்டு. அதில் முதலாவதாக வருவது அல்சர் எனும் இரைப்பைப் புண். ஆனால், அடிக்கடி வயிற்றில் வலி வந்தால், என்ன காரணம் என்று மருத்துவரிடம் பரிசோதித்துத் தெரிந்துகொள்வது நல்லது.
எது அல்சர்?
அல்சரின் ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் வரும். பசி இருக்காது. கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய மாதிரி இருக்கும். சில நேரம் நெஞ்சில் பந்து வந்து அடைப்பது போலிருக்கும். இது ஏப்பம் விட்டதும் சரியாகும். நோயின் அடுத்த கட்டத்தில், வயிற்று வலியும் வாந்தியும் வரும்.கேஸ்ட்ரிக் அல்சராக இருந்தால் பசிக்கிற நேரத்தில் வலி வயிற்றைக் கவ்வி பிடிக்கும். சாப்பிட்டதும் வலி அதிகமாகும். டியோடினல் அல்சராக இருந்தால் சாப்பிட்டதும் வயிற்று வலி குறையும். அல்சர் கடுமையாகி விட்டது என்றால் ரத்த வாந்தி வரும். மலம் கறுப்பாகப் போகும்.
என்னென்ன பாதிப்புகள்?
வயிற்றில் எந்தப் பகுதியில் வலி வந்தால் என்ன பாதிப்பு என்பதைத் தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம்.
> வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கமாக வலி எடுத்தால், கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் பிரச்சினை இருக்கலாம்.
> மேல்வயிற்றின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால் இரைப்பை, முன்சிறுகுடல், கணையம் ஆகியவற்றில் பிரச்சினை இருக்கலாம்.
> மேல் வயிற்றின் இடது பக்கத்தில் வலி உண்டானால், மண்ணீரலில் பிரச்சினை இருக்கலாம்.
> வயிற்றின் நடுப்பகுதியில் இடது பக்கமாக ஏற்படும் வலிக்கு இடது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம்.
> வலது பக்கத்தில் வலி என்றால், வலது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம்.
> நடு வயிற்றின் மத்தியப் பகுதியில் வலி ஏற்படுகிறது என்றால், சிறுகுடலில் பிரச்சினை என்று யூகிக்கலாம்.
> அடிவயிற்றின் வலது பக்க வலிக்குக் குடல்வால் அழற்சி, வலது சிறுநீர்க் குழாய் கல் (Ureteric Stone), கருக்குழாய் பாதிப்பு, ஏறுகுடல் கோளாறு போன்றவை முக்கியமான காரணங்கள்.
> அடிவயிற்றில், தொப்புளுக்குக் கீழ் வலி வந்தால், கருப்பை அல்லது சிறுநீர்ப்பைக் கோளாறு காரணமாகும்.
> அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலித்தால், இடது சிறுநீர்க் குழாய் கல் / இறங்கு குடல் கோளாறு இருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது.
ஆபத்தான வயிற்றுவலி
வயிற்றுவலி திடீரென ஆரம்பித்து, பொறுக்கமுடியாத அளவுக்கும், காய்ச்சல், வாந்தி போன்ற கூடுதல் அறிகுறிகளுடனும் அச்சுறுத்தினால், அது ஆபத்தான வலி! உதாரணமாக, குறிப்பிட்ட ஓர் இடத்தில் தொடர்ந்து வலி ஏற்படுவது, மிக அதிகக் காய்ச்சல், தொடர் வாந்தி, ரத்த வாந்தி, தார் மாதிரிக் கறுப்பாக மலம் போவது, அடிக்கடி மலம் போவது, தோள்பட்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கடுமையான அல்சர், குடலடைப்பு, கணைய அழற்சி, புற்றுநோய், பித்தப்பை அழற்சி / கல், சிறுநீரகக் கல், கருக்குழாயில் கரு வளர்வது, சினைப்பை நீர்க்கட்டி வெடிப்பது போன்ற எதுவாகவும் இருக்கலாம். எனவே, காலம் கடத்தாமல் உடனே மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும். தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் வயிற்றுக்குள் ஆபத்து வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும்.
வயிற்றுவலி திடீரென ஆரம்பித்து, பொறுக்கமுடியாத அளவுக்கும், காய்ச்சல், வாந்தி போன்ற கூடுதல் அறிகுறிகளுடனும் அச்சுறுத்தினால், அது ஆபத்தான வலி! உதாரணமாக, குறிப்பிட்ட ஓர் இடத்தில் தொடர்ந்து வலி ஏற்படுவது, மிக அதிகக் காய்ச்சல், தொடர் வாந்தி, ரத்த வாந்தி, தார் மாதிரிக் கறுப்பாக மலம் போவது, அடிக்கடி மலம் போவது, தோள்பட்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கடுமையான அல்சர், குடலடைப்பு, கணைய அழற்சி, புற்றுநோய், பித்தப்பை அழற்சி / கல், சிறுநீரகக் கல், கருக்குழாயில் கரு வளர்வது, சினைப்பை நீர்க்கட்டி வெடிப்பது போன்ற எதுவாகவும் இருக்கலாம். எனவே, காலம் கடத்தாமல் உடனே மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும். தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் வயிற்றுக்குள் ஆபத்து வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும்.
என்ன பரிசோதனைகள்?
வயிற்று நோயைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இரைப்பை எண்டாஸ்கோப்பி, இ.சி.ஜி., அல்ட்ரா சவுண்ட், கொலனோஸ் கோப்பி, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் அவசியம் தேவை. அவற்றுடன் ரத்தம், சிறுநீர், மலம் ஆகியவற்றையும் பரிசோதிக்க வேண்டும். அடிக்கடி வலி வருபவர்களுக்கும். ஆபத்தான வயிற்றுவலி வந்தவர்களுக்கும் இவை கட்டாயம்.
எச்சரிக்கை!
நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சில் வலி ஏற்படவேண்டும் என்ற அவசியமில்லை. பதிலாக, நெஞ்சு எரிவது போலிருக்கும் அப்போது அதை அல்சர் வலியாக எண்ணிப் பலரும் அலட்சியப்படுத்திவிடுவார்கள். இவர்கள் நெஞ்சில் எந்த ஓர் அசவுகரியம் ஏற்பட்டாலும், உடனே மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது.
(அடுத்த வாரம்: குழந்தைகளுக்கு டயபர் அணிவிப்பது நல்லதா?)
கட்
டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
54 mins ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
சுற்றுலா
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago