நோய்களுக்கு நோ - 3 | பக்கவாதம்: வருமுன் காப்பது நல்லது

By டாக்டர் எம். அருணாசலம்

அவருக்கு வயது சுமார் 60 இருக்கும். காலை 11 மணி அளவில் கடைக்குச் சென்றபோது கால்கள் சற்றுத் தடுமாறிப் பின்னியுள்ளன. வீட்டுக்குத் திரும்பியவர் சிறிது நேரம் இருந்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். வேலையின்போது அவரது இடக்கையில் வலி ஏற்பட்டதால், வீட்டுக்குத் திரும்ப வந்துவிட்டார். வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் சொல்லாமல் தூங்கிவிட்டார். மாலை 6 மணி அளவில் விழித்தவரின் பேச்சு சற்று குழறத் தொடங்கியது. அருகிலிருந்த மருத்துவரிடம் மனைவி அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த மருத்துவர் அவரை ஸ்கேன் எடுத்துவரச் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஸ்கேன் எடுத்த பின்னர், நன்றாகத்தானே இருக்கிறோம், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று வீட்டுக்கு வந்துவிட்டார்.

இரவு 11 மணி அளவில், திடீரென்று அவருக்குக் குளித்ததுபோல் உடலெல்லாம் வியர்த்து ஊற்றியது. குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார். மனைவியிடம் இருந்து தண்ணீரை வாங்க முயலும்போது, இடக்கை செயல்படவில்லை. மறுநாள் காலை 5 மணி அளவில் மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது இடது காலும் செயல்படவில்லை. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு வாரம் அவர் மருத்துவமனையில் தங்க நேர்ந்தது. இன்று கையும் காலும் சற்றுச் செயல்படுகின்றன என்றாலும், அவரால் பழைய நிலைமைக்கு முழுமையாகத் திரும்ப முடியவில்லை. அவருக்கு ஏற்பட்டது பக்கவாதம். அதன் அறிகுறிகள் தென்பட்ட உடனே, குறைந்தபட்சம் நான்கு மணி நேரத்துக்குள் சிகிச்சை பெற்றிருந்தால், அவருடைய கை, கால் செயல்பாடுகளை மீட்டெடுத்திருக்கலாம். அவரின் அறியாமை, அலட்சியத்தின் காரணமாகப் பக்கவாதத்தின் பாதிப்பு மோசமடைந்துவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்