விநோத ஆழ்கடல்!

By டி. கார்த்திக்

கடலுக்கடியில் என்ன இருக்கும்? கடல் எவ்வளவு ஆழமாக இருக்கும்? இப்படியான கேள்விகள் உங்களுக்கு எழுந்திருக்கிறது அல்லவா? உண்மையில் நில மட்டத்தில் இருந்து கடலுக்குள் ஓரிரு மைல்வரை இருக்கும் பகுதியை ‘கண்ட எல்லை’ என்றே அழைக்கிறார்கள். இதன் சாரசரி ஆழம் 600 அடி.

அதற்குப் பிறகுதான் நிஜக் கடலே தொடங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் சமவெளிப் பிரதேசம், எரிமலைகள், படுகுழிகள், மலைத்தொடர்கள் ஆகியவையும் ஆழ்கடலுக்குள் அணிவகுத்து காணப்படுகின்றன. கடலுக்கடியில் சூரிய ஒளியினால் ஏற்படும் வெளிச்சம்கூட 100 அடி வரைதான் தெரியும். அதற்குக் கீழ் வெளிச்சம் மங்கிவிடும். ஆயிரம் அடிக்கு பிறகு கும்மிருட்டுதான்!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜேக் பிக்கர்ட் என்ற விஞ்ஞானி 1955-ம் ஆண்டில் ஒரு சிறிய நீர்மூழ்கி அமைப்பு மூலம் கடலுக்குள் இறங்கினார். 5 மணி நேர பயணத்துக்கு பிறகே, தரையைத் தொட்டுவிட்டதாக வயர்லஸ் கருவி மூலம் தகவல் அனுப்பினார். பசிபிக் பெருங்கடலில் அவர் இறங்கிய இடம்தான் ‘மரியானா டிரெஞ்ச்’. அதன் ஆழம் 35 ஆயிரத்து 808 அடி.

உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டைவிட இது மிகவும் அதிகம். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 26 ஆயிரத்து 246 அடி. அப்படியானால் கடல் எவ்வளவு ஆழம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆனால், கடலின் ஆழம் எல்லா இடங்களிலும் இப்படி ஒரே மாதிரியாக இருக்காது. இடத்துக்கு இடம் மாறுபடவும் செய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

விளையாட்டு

21 mins ago

தமிழகம்

36 mins ago

ஓடிடி களம்

57 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுலா

24 mins ago

தொழில்நுட்பம்

15 mins ago

தமிழகம்

51 mins ago

மேலும்