விடை தேடும் அறிவியல் 29: ஞாபகங்கள் எப்படி உருவாகின்றன?

By நன்மாறன் திருநாவுக்கரசு

நினைவாற்றல் என்பது எல்லா உயிர்களுக்குமே உரித்தான பண்பு. ஆனால், மனிதர்கள் மட்டுமே ஞாபகங்களில் இருந்து படிப்பினைகளைப் பெறுகிறார்கள். இந்தப் படிப்பினைகள் உயிர் பிழைத்தலுக்கு அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. நினைவுகள் உருவாவதற்கு மூளை எனும் உறுப்புதான் மூல கர்த்தாவாக இருக்கிறது. ஆனால், இந்த நினைவுகள் எப்படி உருவாகின்றன? எங்கே சேகரிக்கப்படுகின்றன? நமது மூளை என்பது செல்போனில் போடப்படும் மெமரி கார்டு போன்றதுதானா? அதில் தேவையான நினைவுகளைச் சேகரித்துக்கொண்டு தேவையற்றதை நீக்க முடியுமா?

நினைவுகள் என்பவை தனித் தனி தகவல்களாக நமது மூளையில் சேமிக்கப் பட்டிருக்கும் என நீங்கள் நினைத்திருந்தால் தவறு. மாறாக நம் மூளை முழுவதும் இடம்பெற்றிருக்கும் நியூரான் எனும் செல்கள் ஒன்றை இன்னொன்று இணைத்தபடி மின்சமிக்ஞைகளைக் கடத்தும்போதுதான் நினைவுகள் உருவாகின்றன. நீங்கள் சிறுவயதில் பாட்டி வீட்டில் சாப்பிட்ட திரட்டுப்பாலை நினைவுகூர்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். சில நியூரான்கள் உங்களுக்குத் திரட்டுப்பாலின் தோற்றத்தைத் தரும். சில நியூரான்கள் அதன் வாசனையை நினைவூட்டும். சில நியூரான்கள் அதன் சுவையையும் உங்கள் பாட்டி வீட்டையும் நினைவுபடுத்தும். இவை எல்லாம் இணைந்துதான் உங்கள் பாட்டி செய்து கொடுத்த உணவு நினைவுக்கு வரும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

28 mins ago

க்ரைம்

34 mins ago

தமிழகம்

59 mins ago

உலகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்