கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்ட பலரும், வெவ்வேறு துறையில் கவனம் செலுத்தி, பணம் ஈட்ட முயன்றுவருகிறார்கள். அதில் ஏராளமானோருடைய கவனம் திரும்பியிருப்பது பங்கு வர்த்தகம் பக்கம்தான். சில்லறை முதலீட்டாளர்களாகப் பலரும் அத்துறையில் குதித்துவருகிறார்கள். இவர்களுக்கு யோசனைகளைத் தெரிவிக்கவே யூடியூபிலும் பங்குச் சந்தை சார்ந்து ஏராளமான அலைவரிசைகள் அணிவகுத்துக்கொண்டிருக்கின்றன. அதில், குறிப்பிடத்தக்க அலைவரிசையாக தமிழில் முன்னணியில் இருக்கிறது ‘மணி பேச்சு’ அலைவரிசை.
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாஸ் தொடங்கிய அலைவரிசை இது. கடந்த 2018ஆம் ஆண்டில் அவர் இந்த அலைவரிசையைத் தொடங்கினார். எளிய மக்களுக்குப் பொருளாதாரம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த யூடியூப் அலைவரிசையை உருவாக்கினார். எனவே, தொடக்கம் முதலே நிதித் துறை சார்ந்த காணொளிகளை அதிகமாகப் பதிவிட்டுள்ளார். மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் தொடங்கி தவணை முறை கடன் திட்டங்கள், ஆன்லைன் வணிகங்கள், சேமிப்புத் திட்டங்கள், தொழில் தொடங்க ஆலோசனை, தங்க முதலீடுகள், நிறுவனங்களின் கதைகள், ரியல் எஸ்டேட் நிலவரம், கிரிப்டோ கரன்சியின் வர்த்தகம், சர்வதேச நிதிப் பிரச்சினை என ஏராமான காணொளிகளை இந்த அலைவரிசையில் காண முடிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 mins ago
ஜோதிடம்
11 mins ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
10 hours ago