இசை - இரண்டு எழுத்து வார்த்தைதான். ஆனால் இந்த ஒற்றைச்சொல்லுக்கு இருக்கும் மகத்துவமோ மிக்க வீரியம் வாய்ந்தது. மனதில் எழும் கவலைகளை மறக்கவைத்து மனித குலத்தை அமைதிப்படுத்த இறைவன் அளித்த அருட்கொடை தான் இசை.
மனதிற்கு மட்டுமல்லாமல் மருத்துவ குணத்துடன் உடலுக்கு ஏற்படும் நோய்நொடிகளையும் கூடக் குணப்படுத்த இசையால் முடியும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. உயிராபத்தான நிலையில் இருப்பவரை கூட இசையால் காப்பாற்றி விடலாம் என்பதற்கு முகலாயப் பேரரசர் அக்பரின் அரசவைக் கவிஞராக இருந்த தான்சேன் ‘தீபக்’ ராகத்தைப் பாடி தீபங்களில் ஒளிவரச் செய்து உயிராபத்தான நிலையில் இருந்த அக்பரின் மகளை காப்பாற்றினார் என்று இசையின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் செவிவழிக்கதை ஒன்று உலவி வருகிறது. இந்தச் செவி வழிக்கதையை பாடல் காட்சியாக்கி அந்தப் பாடலைக் கல்வெட்டாக மக்கள் மனங்களில் பதியவைக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறார் இயக்குநர் முக்தா வி. சீனிவாசன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கல்வி
29 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago