நாடகமே திரை: பகுதி 02 | ஒரு தொழிலும் அறியாதவனே நாடகக்காரன்!

By ஆர்.சி.ஜெயந்தன்

மறைந்த நவீன நாடகாசிரியர் ந.முத்துசாமி தொடங்கிய நாடகக் குழு ‘கூத்துப் பட்டறை’. அதில் பயின்றவர் என்றால் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மத்தியில் மரியாதையும் வரவேற்பும் இருக்கிறது. அதேபோல் தரமணி திரைப்படக் கல்லூரியின் நடிப்புப் பிரிவு, தேசிய நாடகப் பள்ளி, புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை ஆகியவற்றில் பயின்றவர்கள் என்றாலும் ஏக மதிப்பு. நாசர் (முதலில் தரமணி திரைப்படக் கல்லூரில் நடிப்பைப் பயின்றவர்), கலை ராணி, பசுபதி, விஜய்சேதுபதி, விதார்த், குரு.சோமசுந்தரம் தொடங்கி தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நடிகர்களாக அடையாளம் பெற்றுவிட்ட பலர், கூத்துப் பட்டறையிலில் பயின்றவர்கள்தான்.

கூத்துப் பட்டறை இப்போதும் இயங்கி வருகிறது என்றாலும் அதிலிருந்து பிரிந்து சென்று இயங்கும் பல குழுக்கள், சினிமாவில் நடிக்க வருபவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன. ஒரு திரைப்படத்துக்காக தேர்வு செய்யப்படும் நடிகர்கள் குழுவுக்கு, படப்பிடிப்புக்குச் செல்லும் முன்னர், 30 நாட்கள் வரை இவர்கள், பயிற்சிப் பட்டறை நடத்துகிறார்கள். எடுக்கப்படவிருக்கும் திரைக்கதையையும் வசனங்களையும் கூடப் பயிற்றுவிக்கிறார்கள். இதுபோன்ற நவீன நாடகக் குழுக்களில் பகுதி நேரமாக சில வருடங்கள் பயின்று, ஒன்று அல்லது இரண்டு நவீன நாடகங்களில் நடித்தவர்களுக்கு திரையுலகில் உறுதியாக வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்