கோடம்பாக்கம் சந்திப்பு: புதிய சந்தானம் 

By செய்திப்பிரிவு

புதிய சந்தானம்

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தில்லுக்குத் துட்டு 2’ படம் வசூல் வெற்றி அடைந்ததால், தனது ‘ஏ 1’ படத்தை இன்று வெளியிடுகிறார். முன்னணிக் கதாநாயகர்கள் செய்யும் அத்தனை அழிச்சாட்டியங்களையும் செய்துகொண்டிருந்த சந்தானம், இந்தப் படத்தில் அதிலிருந்து வெளியே வந்திருக்கிறாராம். ‘சூது கவ்வும்’ பாணியிலான கதையில் முதல்முறையாக நடித்திருக்கிறாராம்.

சந்தானத்துக்கான நகைச்சுவையின் பாணியும் இதில் மாறியிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ‘ஏ 1’ படத்தை இயக்கியிருக்கும் ஜான்சன். ‘படத்தின் கதைக்காகவே இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறேன்’ என்று தன் பங்குக்குக் கூறியிருக்கும் சந்தோஷ் நாராயணன், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித் தனி தீம் இசையை வழங்கியிருக்கிறாராம். இதுவும் சந்தானம் படத்துக்குப் புதுசுதானாம்.
 
அங்கே நாயகன், இங்கே வில்லன்!

பாலிவுட்டில் கதாநாயகனாக நடித்துக்கொண்டு கோலிவுட்டில் வில்லனாக நடிக்கவரும் நடிகர்களின் வரிசையில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் அபய் தியோல். ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ படத்தில்தான் அவருக்கு வில்லனாகியிருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அபய் தியோல் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படத்தைத் தயாரித்து வரும் ‘கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்’ நிறுவனம். ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தில் விக்கிரமாதித்தன் கதாபாத்திரத்தில் அபய் தியோல் ஏற்கெனவே நடித்திருக்கிறார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. 

திருமணத்துக்குப் பின் ஆர்யா!

திருமணத்துக்குப் பின் தேங்கிவிடாமல் மும்முரமாக நடித்துக்கொண்டிருக்கும் ஆர்யா ஆகஸ்ட் 30-ல் வெளியாகவிருக்கும் ‘காப்பான்’ படத்தையும் அதைத் தொடர்ந்து செப்டம்பரில் வெளியாகவிருக்கும் ‘மகாமுனி’ படத்தையும் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இவற்றில் ‘மௌன குரு’ படப் புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் ‘மகாமுனி’ உருவாகி இருக்கிறது. 

ஹாட்ரிக் கதாநாயகி!

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கொலைகாரன்’ படத்தின் நாயகி அஷிமா நர்வால். மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்ற இவர், தெலுங்கில் ‘நாடகம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் வெற்றியடைய, அடுத்து அங்கே நடித்த ‘ஜெர்ஸி’ என்ற படமும் ஹிட். மூன்றாவதாக நடித்த ‘கொலைகாரன்’ படமும் ஹிட் என்பதால் ‘நான் இப்போது ஹாட்ரிக்’ நாயகி என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். தற்போது ஆரவ் நடித்துவரும் ‘ராஜ பீமா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துவரும் அஷிமா, ஒரு இண்டீரியர் டிசைனர்.

அதிரும் சிங்கப் பெண்ணே!

அட்லீ இயக்கத்தில் விஜய் கால்பந்தாட்டப் பயிற்சியாளராக நடித்துவரும் ‘பிகில்’ உட்படத் தமிழில் நான்கு படங்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் இடம்பெறவிருக்கும் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் இசைக் காணொலியாகச் சமீபத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்பாடல் படத்தில் இடம்பெற்றாலும், தனி ஆல்பம் ஒன்றுக்காக இசையமைக்கப்பட்டதுபோல் சர்வதேசத் தன்மையுடன் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்தப் பாடலுக்காக ரஹ்மானுக்குச் சர்வதேச இசை விருது மீண்டும் கிடைக்கலாம் என்று எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். 

வேட்டைக்காரனாக கிருஷ்ணா

கடந்த 2012-ல் வெளியாகி கிருஷ்ணா, பிந்து மாதவி இருவருக்குமே பெயர் பெற்றுக்கொடுத்த படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சத்யசிவா இயக்க, அதே கூட்டணியில் உருவாகியிருக்கிறது ‘கழுகு 2’. ஆகஸ்ட் 1 அன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தைத் தனது மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரித்திருப்பவர் சிங்காரவேலன்.

‘கழுகு’ முதல் பாகத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்தார் கிருஷ்ணா. ‘கழுகு 2’ படத்திலோ மலைவாழ் மக்களுக்கு இடையூறு செய்யும் சில ஆபத்தான மனிதர்களை வேட்டையாடும் மலைவாழ் இளைஞனாக நடித்திருக்கிறாராம். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தின் முடிவும் அதிரவைக்கும் என்கிறார் இயக்குநர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்