செங்கோட்டைச் சிங்கம், எட்டுக்கட்டையில் பாடும் சாரீரம் கொண்ட பாடக நடிகர் என்று நாடக உலகில் புகழ்க்கொடி நாட்டியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. அவருக்குப் பின் கம்பீரமும் இனிமையும் சரியான கலவையில் இணைந்த குரலில் பாடி ‘கிட்டப்பாவின் இசை வாரிசு’ என்று புகழ் பெற்றவர் டி.ஆர்.மகாலிங்கம். முத்தமிழும் அரியாசனத்தில் அமர்ந்திருந்த மதுரையின் மைந்தர்.
காரைக்குடியில் கீற்று வேய்ந்த படப்பிடிப்புத் தளங்களை அமைத்து, ஏவி.மெய்யப்பன் பேசும் படம் தயாரித்து, இயக்கிய காலம். கண்களை அள்ளும் கொள்ளை அழகுடன் 14 வயது டி.ஆர்.மகாலிங்கம் பாடுவதைக் கண்ட மெய்யப்பன், தனது ‘நந்த குமார்’ (1938 ) படத்தில் பதின்ம வயதுக் குறும்புக் கண்ணன் வேடம் கொடுத்து, சிறார் நடிகராக அறிமுகப்படுத்தினார். பின்னர் அவரே 21 வயது மகாலிங்கத்தை ‘ஸ்ரீவள்ளி’ (1945) படத்தில் கதாநாயகனாக அறிமுகப் படுத்தினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சுற்றுலா
9 hours ago
வாழ்வியல்
14 mins ago
தமிழகம்
30 mins ago
க்ரைம்
16 mins ago
சினிமா
44 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
38 mins ago
சினிமா
53 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
54 mins ago
இந்தியா
59 mins ago
சினிமா
1 hour ago