“தட்சிணசித்ரா உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. இன்றைக்கு ‘கிரிஷ்ணா’ என்கிற தோல்பாவைக் கூத்தைப் பார்க்கப் போறீங்க. அந்தக் காலத்துல 10-15 பேர் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவோம். இன்னைக்கோ நான் ஒரே ஆளுதான் மொத்த நிகழ்ச்சியையும் நடத்துறேன். நானே எல்லா பொம்மைகளையும் ஆட்டணும். கருவிகளை இசைக்கணும். கதாபாத்திரங்களுக்கு வசனம் பேசணும். இது பாரம்பரியக் கலை. ஆனா, இன்னைக்கு தட்சிணசித்ரா மாதிரியான இடங்கள்ல மட்டுமே நடக்குது. அதுவும்கூட எல்லா நாள்லயும் கிடையாது. விடுமுறை நாள்ல மட்டுமே நிகழ்ச்சி நடத்த வாய்ப்புக் கொடுக்குறாங்க. நீங்க விரும்புனா உங்க வீட்டு விசேஷம், கல்யாணம், பிறந்தநாள் விழாக்கள்லயும் இதுபோல நிகழ்ச்சி நடத்தித் தருவோம். இந்த நிகழ்ச்சியோட முடிவுல உங்களுக்கு விருப்பம் இருந்தா, கலைஞர்களுக்கு விரும்புனதைக் கொடுக்கலாம்…”
பெரிய உணர்ச்சிகள் இல்லாமல், சற்றே விரக்தி தொக்கி நிற்கக்கூடிய தொனியில் பாவைக்கூத்துக் கலைஞர் செல்வராஜா பேசுவதைக் கேட்கும்போது, அவர் குரலில் தோய்ந்திருக்கும் வருத்தம் நம் மீதும்கூடக் கவிந்து படர்ந்துவிடக்கூடும். இந்தக் கலையே வாழ்க்கையென்று இருந்துவிட்ட அவர், 70 வயதைக் கடந்துவிட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் அருகேயுள்ள கொளத்தூரில் வசிக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
இந்தியா
16 mins ago
தமிழகம்
32 mins ago
சினிமா
27 mins ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago