தமிழ் சினிமாவும் மாற்றுத்திறனாளிகளும்

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழில் மாற்றுத் திறனாளி கதா பாத்திரத்தைக் கையாண்ட பெரும் பாலான திரைப்படங்கள் பார்வையாளர்களிடம் மலினமான பரிதாப உணர்வைத் தூண்டுவ தற்கே அவர்களைப் பயன் படுத்தியுள்ளன. இதைவிடக் கொடுமை என்னவென்றால் பல திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகள் கேலிசெய்யப்படுவதை நகைச்சுவை என்கிற பெயரில் திணித்துள்ளன. கவுண்ட மணி, விவேக், சந்தானம் போன்றோர் இது போன்ற நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பங்களித்துள்ளனர்.

புரிதலை அதிகப்படுத்தினவா? : சிவாஜி கணேசன் (’பாகப்பிரிவினை’, ‘தவப்புதல்வன்’, ‘ஆலயமணி’), கமல் ஹாசன் (’ராஜபார்வை’, ‘அன்பே சிவம்’) விக்ரம் (’காசி’, ‘தெய்வத் திருமகள்’), சூர்யா (பேரழகன்), சிம்ரன் (துள்ளாத மனமும் துள்ளும்), ஜோதிகா (’பேரழகன்’, ‘மொழி’), நயன்தாரா (’நானும் ரவுடிதான்’, ‘நெற்றிக்கண்’) என பல முன்னணி நட்சத்திரங்கள் மாற்றுத்திறனாளியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளனர். அத்தகைய திரைப்படங்களில் அவர்களுடைய நட்சத்திர அந்தஸ்தைக் கருத்தில் கொண்டாவது மாற்றுத் திறனாளிக் கதாபாத்திரங்கள் கண்ணியமாகவும் மதிப்புக்குரியதாகவும் சித்தரிக்கப்பட்டுவிடும். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்தப் படங்கள் மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கையையும் அவர்களைப் பற்றிய பிறரின் புரிதலையும் மேம்படுத்துவதற்கு எவ்வளவு பங்களித்திருக்கின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்