உலக நகரங்கள் நாள்: அக்டோபர் 31 | வணக்கம்: வாழவைக்கும் சென்னை!

By ப்ரதிமா

பள்ளி விடுமுறையின்போது இரண்டு முறை சென்னைக்கு வந்திருந்தாலும் கிராமத்துக்கும் நகரத்துக்கும் வித்தியாசம் தெரியாத காலம் அது. வேலை நிமித்தம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்ததுதான் என் முதல் அதிகாரப்பூர்வ நகரப் பயணம். எங்கள் கிராமத்து வீட்டை விட்டு அதிகபட்சம் 40 கி.மீக்கு மேல் பயணம் செய்திராத எனக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்ததே பெரும் சாதனைதான்.

சென்னை மாநகரத்தைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகளைக் கேட்டிருந் ததால் யாரைக் கண்டாலும் பயம், எதைப் பார்த்தாலும் பதற்றம். ஆட்டோக்காரர் ஏமாற்றிவிடுவாரோ, பழக்காரம்மா அதிகமாகப் பணம் வாங்கிவிடுவாரோ என்று கலக்கமாக இருந்தது. அன்றைக்கு நேர்முகத் தேர்வு முடிந்து, சாப்பிடுவதற்காக என் மாமாவுடன் உணவகத்துக்குச் சென்ற போது அங்கே அலைமோதிய கூட்டத்தைப் பார்த்து வியந்தேன். “இந்த ஊர்ல யாரும் வீட்ல சமைக்கவே மாட்டாங்களா?” என்று நான் கேட்டதும் மாமா சிரித்துவிட்டார். இங்கே பலரும் வேலைக்குச் செல்வதால், காலையில் சமைக்க நேரம் இருக்காது என்று விளக்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்