ஆங்கிலப் புத்தாண்டு 2020 பொதுப் பலன்: மகரம்

By செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

மகர ராசி வாசகர்களே

பிரதிபலன் பாராமல் உதவுபவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள்.

எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருவாயை உயர்த்துவதற்குக் கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள்.

1.1.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகிக்கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். பூர்விகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும்.

சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும். சின்ன சின்ன வேலையை முடிப்பதில்கூடச் சிக்கல்கள் இருந்ததே! முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும். வெகுநாட்களாக போக நினைத்தும் தடைபட்டுக்கொண்டிருந்ததே! இப்பொழுது குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உதவுவார்கள். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குருபகவான், உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மகுருவாக அமர்வதால் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தேனொழுகப் பேசுகிறார்கள் என்று யாரையும் நம்பிவிட வேண்டாம். அடிக்கடி கோபப்பட்டு படபடப்புக்குள்ளாவீர்கள். உணவில் உப்பு, காரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

மஞ்சள் காமாலை வரக்கூடும். காய்ச்சிய நீரை அருந்துங்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். பிள்ளைகள் சில நேரங்களில் உங்களைப் புரிந்துகொள்ளாமல் பேசுவார்கள்.

உணர்ச்சிவசப்படாமல் எந்த முடிவும் எடுப்பது நல்லது. குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, தலை சுற்றல் வரக்கூடும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வீடுகட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணை களைக் குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவுக்குத் தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும்.

26.12.2020 வரை சனிபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் ஏழரைச்சனியின் ஒருபகுதியான விரயச் சனி தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பழைய கடனை எவ்வாறு சமாளிக்கப்போகிறோமோ என்று கவலைப்படுவீர்கள். பணவரவு ஓரளவு இருக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்ட பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளைப் பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிக்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவுக்குத் தர்மசங்கடத்தில் மூழ்கக் கூடும். நண்பர், உறவினர் சிலர் உங்களைத் தவறான வழிக்குத் தூண்டுவார்கள். ரத்த அழுத்தம், சளித்தொந்தரவு, இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும்.

வருடம் பிறக்கும்போது கேது 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக லாபம் உண்டு. மின்சார, சமையலறைச் சாதனங்கள் பழுதாகும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். திடீர்ப் பயணங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள். ராகு ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். காற்றோட்டம், குடிநீர் வசதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்த வீட்டிலிருந்து எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.

எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைத்து, அயல்நாடு சென்று வருவீர்கள். இந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் கேதுவும், 5-ல் ராகுவும் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். மகளின் கல்யாணத்தைப் போராடி முடிப்பீர்கள்.15.05.2020 முதல் 31.5.2020 வரை மற்றும் 28.7.2020 முதல் 31.8.2020 வரை சுக்ரன் ஆறில் மறைவதால் சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிரதான இடத்துக்குக் கடையை மாற்றுவதற்குத் திட்டமிடுவீர்கள். சிலர் சொந்த இடம் வாங்கி கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் தங்களது பங்கைக் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். உத்தியோகத்தில், அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். என்றாலும், அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் சற்றுத் தாமதமாகக் கிடைக்கும். இந்தப் புத்தாண்டு சமயோஜித புத்தியால் சாதிக்க வைப்பதுடன் வாழ்வின் நெளிவு, சுளிவுகளையும் கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்

ஸ்ரீபைரவரை சனிக்கிழமை, அஷ்டமி திதி நடைபெறும் நாட்களில் நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்குங்கள். வாழைப்பழம் தானமாகக் கொடுங்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்