யாழ்ப்பாணத்திலுள்ள ஏழு தீவுகளில் ஒன்று நயினார் தீவு. இதன் மற்றொரு பெயர் நாகதீப். யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக தென்மேற்குத் திசையில் சுமார் 38 கி.மீ. பயணம் செய்தால் நயினார் தீவு வரும். இதற்குப் படகு வசதி மட்டுமே உள்ளது. சாலைவழிப் பயண வசதி கிடையாது. படித்துறையில் இறங்கி சுமார் ஒரு பர்லாங் பயணம் செய்தால் நயினார் தீவு நாகபூசணி அம்மன் கோயிலை அடையலாம்.
இந்தக் கோயிலுக்கும் தாட்சாயணிக்கும் தொடர்பு உண்டு. தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு அழையா விருந்தாளியாகச் சென்று, தந்தையால் அவமானப்படுத்தப்பட்டு, யாக குண்டத்தில் எரிந்தாள் தாட்சாயணி. கருகிய தாட்சாயணியின் உடலைச் சுமந்தபடி சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். விஷ்ணு, தன் சக்கராயுதத்தால் தாட்சாயணியின் உடலை 51 கூறுகளாக்கினார். அவை 51 சக்தி பீடங்களாகின. அப்படி விழுந்த பாகங்களில், சக்தியின் இடுப்புப் பகுதியும் சிலம்புகளும் இந்த இடத்தில் விழுந்ததாக ஆலயத்தின் ஸ்தல வரலாறு கூறுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago