சித்தர்கள், அருளாளர்கள் என்கிற வாக்குப்படி பிறவியெடுத்த அருள் ஞானி ரெட்டியபட்டி சுவாமிகள். தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தில் இருந்து நாகலாபுரம் செல்லும் வழியில் ரெட்டியபட்டியில் வீரபத்திரர் - ஆவுடையம்மாள் தம்பதிக்கு, 1857ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு ‘சுப்பிரமணியன்’ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அவர் ஏட்டுப் படிப்பு படிக்காமலேயே அனைத்தையும் உணர்ந்தார். சிறிது காலம் கடந்ததும் ‘ரெட்டியபட்டி கிராமத்தை விட்டுப் புறப்படுக’ என்கிற அசரீரி அவரது காதில் ஒலித்தது.
அந்த அருள்வாக்குப்படி சுப்பிரமணியன், நடைப்பயணமாக திருச்செந்தூர் சென்றார். திருச்செந்தூரில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து திருக்காட்சி அருளினார். ‘ஆடி வருவாய் மயிலே... தேடி வருவாய் மயிலே’ என முருகப்பெருமான் அருளால் கவிபாடினார். சிறிது காலம் சென்றதும் திருச்செந்தூரில் தங்கி யிருந்த சுப்பிரமணியனுக்கு, ‘மதுரை செல்க’ என்கிற அருள்வாக்கு காதில் கேட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
26 mins ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago