கிறிஸ்துமஸ் திருநாள் சிறப்புக் கட்டுரை | இறை வருகையின் பேரானந்தம்!

By நோவா நதி

இஸ்ரேலிய ராணுவத்துக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் உக்கிரமான போர் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில் வரலாற்றின் வேர்களை நோக்கிப் பயணப்பட்டால், இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஆபிரகாமின் வழித்தோன்றல்கள்தாம். இந்தச் சகோதரச் சண்டையின் வேர், விவிலியக் காலத்தில் ஆதாம் - ஏவாளின் மகன்களான காயின் - ஆபேல் நாள்களில் தொடங்கியது. அதைத் தெரிந்துகொள்ள இறைமகன் யேசு ஒரு மனிதனாக ஏன் பூமிக்கு அனுப்பப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யேசு பூமியில் மனிதனாகப் பிறப்பதற்கு முன், ‘காண முடியாதபடி வானுலகில் வாழ்ந்துவந்தார்’ என்று யோவான் 8:23இல் குறிப்பிடுகிறார்.

‘யேசு, பூமியைப் படைத்த ஒரே கடவுளுடைய முதல் படைப்பாக இருந்தார்; மற்ற எல்லாவற்றையும் படைப்பதில் கடவுளுக்கு உதவியாக இருந்தார். அவர் மட்டுமே ஏக இறைவனாகிய வானுலகத் தந்தையால் நேரடியாகப் படைக்கப்பட்டார்; அதனால்தான், கடவுளுடைய ‘ஒரே மகன்’ என அழைக்கப்படுகிறார். அவர் கடவுளின் சார்பாகப் பேசுபவர் என்பதால் ‘வார்த்தை’ எனவும் அழைக்கப்படுகிறார்’ எனத் தீர்க்கதரிசியான யோவான் 1:1-3, 14 ஆகிய திருவசனங்களின் வழியாகக் குறிப்பிடுகிறார். யேசு பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நீதிமொழிகள் புத்தகத்தின் 8:22, 23, 30 வசனங்களும் கொலோசியர் புத்தகத்தின் 1:15, 16ஐயும் வாசித்து இதை அறிந்துகொள்ளலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

மேலும்