உலகம் ஆதி பராசக்தியின் அருளால் இயங்குகிறது. இறையருள் நமக்கு சிவசக்தி சொரூபமாகக் கிடைக்கிறது, அம்மன் கோயில்களில் செடல் உற்சவம், பொதுவாக எல்லா கோயில்களிலும் நடைபெறும். ஆனால் அதை முதன் முதலில் நடத்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா? பெருமாள் கோயில்களில்தான் திருவடி தரிசனம் செய்யலாம். ஆனால் ஓர் அம்மன் ஆலயத்திலும் திருவடி தரிசனம் செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கு பதிலாய் அருள்பாலிப்பதுதான் விழப்பள்ளம் செங்கழனி மாரியம்மன் ஆலயம். விவசாயத்தை மீட்டெடுத்ததால் இந்த அம்மனுக்கு செங்கழனி மாரியம்மன் என்கிற திருநாமத்தைச் சூட்டி விவசாய பெருமக்கள் வழிபாடு செய்யத் தொடங்கினர். பிற்காலத்தில் இக்கோயில் புதிய கற்கோயிலாக கட்டப்பட்டு, நூதன கர்ப்பக்கிரகம் அர்த்தமண்டபம், மகா மண்டபம் எல்லாம் அமைக்கப்பட்டு தற்போது அழகுறக் காட்சி தருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் வைகாசி விசாகத்தன்று முதன்முதலாக ஒரு பக்தர், அவரின் மகனை அம்மை நோயிலிருந்து காத்ததால், தன் உடல் முழுவதும் சின்ன சின்ன சூலாயுதம் செய்து அதைக் குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினாராம். அதுவே இந்த மாரியம்மன் கோயிலில் நடந்த செடல் உற்சவம் என்று சொல்லப் படுகிறது. அதன்பின்னரே பல ஊர்களிலும் இந்த செடல் உற்சவம் நடக்கின்றது. வடலூர் வள்ளலார் சுவாமிக்கு செங்கழனி மாரியம்மன்தான் இஷ்ட தெய்வம். அதனாலேயே இக்கோயிலுக்கு அவர் பலமுறை வந்து வழிபாடு நடத்தியதாகவும் இங்கு உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கல்வி
54 secs ago
உலகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago