ஆலயங்களில் பொதுவாகத் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்வித்து, அலங்காரங்கள் முடிந்து திரைச்சீலையை அகற்றியவுடன் இறைவனின் தரிசனம் கிடைக்கும். ஆனால், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் ஆலயத்தின் திரைச்சீலைக்குப் பின்னே ஒரு புராணக் கதை விரிகிறது! காஷ்யபருக்கும் அதிதிக்கும் குழந்தை வாமனனாகப் பிறந்த திருமால், தேவர்களின் துயர் தீர்க்க மாவலியிடம் மூவடி மண் கேட்டு உலகளந்து நின்றது நாம் அறிந்ததுதான். தர்மத்தை ரட்சிக்க மன் நாராயணன், மாவலியின் சிரத்தில் பாதம் வைத்து அவனைப் பாதாளத்திற்கு அனுப்பினார். இருந்தாலும், தீராத பழியாலும் தோஷத்தாலும் நாராயணன் அல்லல்பட்டார். தனது துயர்தீர்க்க வேண்டி, கெடில நதிக்கரையில் ஈசனை மனமுருகப் பூசித்தார்.
திருமாலின் பக்தியால் மகிழ்ந்த ஈசன், திருமாலுக்கு அருள்காட்சி தந்தார். “மாலே! மணிவண்ணா! மாயவனே! திருமகள் நாயகனே! வேண்டும் வரம் யாது? எது வானாலும் தருவதற்குச் சித்தமாக உள்ளோம்” என்று விடையேறி உமையோடு வந்த விண்ணவர் தலைவன் வாய் மலர்ந்து அருளினான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
12 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
8 hours ago
க்ரைம்
8 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago