முன்னொரு காலத்தில் நினிவே என்கிற பட்டணத்தில் வாழ்ந்த மக்கள் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்காமல் வாழ்ந்தனர். கடவுள் அவர்களை எச்சரிக்கும் பொருட்டு யோனா என்கிற தன்னுடைய திருப்பணியாளரை அழைத்து, “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய் நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேவுக்குச் சென்றார். யோனா நகருக்குள் சென்று உரத்த குரலில், “நீங்கள் அனைவரும் மிகவும் தீமையாக, பொல்லாத வழிகளில் நடப்பதால் இன்னும் நாற்பது நாள்களில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள்.
இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் கடைபிடிக்கச் செய்தான். “எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும். தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
தமிழகம்
32 mins ago
க்ரைம்
37 mins ago
இந்தியா
50 mins ago
உலகம்
18 mins ago
க்ரைம்
41 mins ago
சுற்றுச்சூழல்
45 mins ago
தமிழகம்
54 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago