திருக்குறுமுள்ளூர் தலத்தில் அருள்பாலித்திருக்கும் அக்னீஸ்வரமுடையார் ஆலயம் புராணச் சிறப்பு மிக்கது. ஒரு சமயம் கங்கைக் கரை புண்ணியத் தலமான காசிமாநகரில் தவத்தில் சிறந்த துர்வாசர் யோக நிலையில் அமர்ந்திருந்தார். அவரது ஆழ்ந்த தவத்தையும் பக்தியையும் மெச்சிய இறைவன் முனிவருக்கு ஏதேனும் ஒரு பரிசளிக்க விரும்பினார். அதன்படி தம் கற்றைச் சடாமுடியிலிருந்து தூய நறுமணம் வீசி நிற்கும் தாமரை மலர் ஒன்றை அந்த முனிவரின் கையில் விழச் செய்தார். இறைவனின் அகமகிழ்வால் தனக்கு வெகுமதியாய் அளிக்கப்பட்ட அத்தாமரை மலரைப் பார்த்து ஆனந்த பரசவத்தில் திக்குமுக்காடிப்போனார் துர்வாசர்.
காட்டு யானையான ஐராவதம்: அதேவேளை தேவலோகத்து அரசனான இந்திரன் தனது வாகனமான ஐராவதம் என்னும் வெள்ளை யானை மீதேறி அவ்வழியாகப் பறந்து வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்ட துர்வாசர் உற்சாகத்தோடு அம்மலரை இந்திரனிடம் கொடுத்தார். வெற்றி மமதையால் உலா வந்துகொண்டிருந்த இந்திரன், அத்தாமரை மலரின் மகத்துவத்தை உணரவில்லை. அலட்சியத்தோடு அதை வாங்கி ஐராவதத்தின் மேல் வைத்தான். அவனைவிடத் தலைக்கனத்தில் இருந்த ஐராவதமோ அந்த அரிய மலரை அலட்சியமாகக் கீழே போட்டுத் தன் காலால் மிதித்துச் சிதைத்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
4 hours ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
48 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago