இந்தியாவின் சுற்றுலா காந்தம்

By கபி

போர்ச்சுகீசியர்களின் பிடியில் 450 ஆண்டுகளாக இன்றைய கோவா மாநிலம் இருந்தது. 1812-1815 காலகட்டத்தில் கோவா ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. 1961, டிசம்பர் 17-ல் இந்தியாவோடு இணைந்தது. ஆங்கிலேயர்களிடமிருந்து 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் போர்ச்சுகல் கோவா மாநிலத்தில் இருந்து வெளியேற மறுத்தது.

இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12-ல் ஆப்ரேஷன் விஜய் எனும் நடவடிக்கையால் கோவாவையும் , டாமன் மற்றும் டையூ தீவுகளையும் கைப்பற்றியது. 1987 மே 30-ல் கோவா இந்தியாவின் 25-வது மாநிலமாகியது. டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களாக தொடர்கின்றன.

இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பழமையான பாறைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன. 360 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கடினப்பாறைகள் என அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. கோவா தன் பரப்பில் 56.6% பகுதியில் காடுகளையும் மரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் சிறிய மாநிலம். இந்தியாவில் மிகக்குறைந்த அளவில் பழங்குடியின மக்களை கொண்ட மாநிலம் எனும் தனித்தன்மைகள் கோவாவுக்கு உண்டு.

சுற்றுலாவே கோவாவின் முதல் தொழிலாகும். இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் 12% பேர் கோவா செல்கின்றனர். இந்தியாவின் மாநிலங்களில் கோவா வளமானது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள தனிநபர் வருமானத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக இங்கே உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

இந்தியா

1 min ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்