கல்வியில் மிளிரும் சிங்கப்பூர்

By செளந்தர நாயகி வயிரவன்

சிங்கப்பூர் நவநாகரிக நாடு. உலக வரைபடத்தில் சிறு புள்ளிதான். ஆனால் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்று.

அருகில் இருக்கும் நாடு

நம் நாட்டுக்கு மிக அருகில் இருக்கும் சிங்கப்பூரில் ‘சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம்’ உள்ளது. ஒவ்வொரு மனிதனும் எட்ட ஆசைப்படும் உலகத் தரம் வாய்ந்த கல்வியை அது வழங்குகிறது.

உலகத் தரமான கல்வி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஒருவர் தம் கலாசாரத்தோடு வாழ்வதும் முக்கியமே.

சிங்கப்பூரில் உலகத் தரமான வாழ்க்கைக்கும் வழியுண்டு.தமிழுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் இடமுண்டு.

தேசியப் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்ப்புப் பிரிவின் இயக்குநர் ராஜாராம் நம்மோடு பகிர்ந்துகொண்டவை:

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், அதன் 16 பிரிவுகள் மற்றும் வகுப்புகள் மூலம், மாணவர்களுக்கு அவரவர் விருப்பம், தகுதிக்கு ஏற்ப தனித்துவம் மிக்க, பரந்த கல்விப் பாதையை வகுத்து இன்றைய தேவைக்கேற்ப அவர்களைத் தயார் செய்கிறது.

இன்றைய போட்டித்தன்மை மிகுந்த, வேகமான உலகத்தில், ஒருவர் எப்போதுமே முன்னிலை வகிக்க முயல வேண்டும்.

இது உலகத்தின் முதல்நிலை பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் பாரம்பரியம்மிக்கது மட்டுமல்ல, ஆய்வுத்துறை, எண்ணற்றப் பாடப்பிரிவுகள் மற்றும் மாணவர்களைத் தயார் செய்யும் முறை, உலகமயமாகிவரும் சூழலுக்கு ஏற்றக் கல்வி என அனைத்திலும் ஒரு தலைசிறந்த இடத்தைப் பிடித்துள்ளது.

மிகச் சிறந்த மாணவர்களின் ஆற்றல், திறமை இந்தச் சமுதாயத்துக்கு அவர்களின் மூலம் பங்காற்றுவதற்காக யூனிவர்சிட்டி ஸ்காலர்ஸ் புரோகிராம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இந்தப் பல்கலைகழகத்துக்கு எட்டு வெளிநாடுகளில் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்குச் சென்று நல்ல பலன் கொடுக்கும் தொழில்முனைவோர் கல்வி கற்கும் வாய்ப்பினையும் பெறலாம்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தோடு பங்காளித்துவப் பல்கலைக் கழகங்களாக அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், சீனாவில் உள்ள ஜின்குவா அல்லது ஃபுடான் பல்கலைக்கழகம், ஸ்வீடன் நாட்டில் உள்ள ராயல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி போன்ற பல்கலைக்கழகங்களுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பினையும் மாணவர்கள்பெறுவர்.

தேசியப் பல்கலைக் கழகத்தில், 37,000 மாணவர்கள், சுமார் 100 நாடுகளில்இருந்து, மூன்று வளாகங்களில் இருப்பதால்,, மாணவர்கள் பரந்துவிரிந்த உலகக் கலாச்சாரத்தையும், அனுபவத்தையும் பெற ஒரு நல்ல வாய்ப்பினைப் பெறுகின்றனர்.

விண்ணப்பிக்கும் முறைகளும், தேவைகளும்:

தேசியப் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைப் பிரிவு, இளநிலைப் பட்டப் படிப்புக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஏறத்தாழ 40,000 விண்ணப்பங்களைப் பெறும். அவற்றில், சுமார் 6,500 இடங்கள் நிரப்பப்படும்.

இளநிலைப் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும், வெளிநாட்டு மாணவர்கள், விண்ணப்பிக்கும் வருடத்தில், அவர்களின், உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்திருக்கவேண்டும்.

மேலும் அவர்கள் விண்ணப்பிக்க நினைக்கும் பாடத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட தேவையைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

பொதுவாக விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் தகுதி பின்வருமாறு:

1. இந்தியாவின் 12 CBSE

2. இந்தியாவின் 12 ICS

3. International Baccalaureate

4. Cambridge International A Levels

இதுதொடர்பான விரிவான தகவல்களைக் கீழ்க்காணும் முகவரியில் ஒருவர் பெறலாம்.

>http://www.nus.edu.sg/oam/apply/international/admissionreq/BYA-admissionreq.html

மாணவர்சேர்க்கை, கல்வி தகுதியின் அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பிக்கப் போதுமான தேவைகள் இருந்தால், ஒருவருக்கு இடம் கிடைத்துவிடும் என்று அர்த்தம் கொள்ள முடியாது.இதற்கு காரணம், தகுதிவாய்ந்த பல மாணவர்கள் விண்ணப்பிப்பதால், போட்டி அதிகமாகவே இருக்கும்.

வெளிநாட்டு மாணவர் களுக்கான மாணவர் சேர்க்கை, அக்டோபர் மாத இடையில் தொடங்கும். வெவ்வேறு தகுதிக்கும் விண்ணப்பம் பெற்று முடிக்கும் தேதி மாறுபடும்.விண்ணப்பிக்க விரும்புவோர், அக்டோபர் மாதம் முதல், தொடர்ந்து, பல்கலைக் கழகத்தின் இணையப் பக்கத்தைப் பார்த்துவரவும்.

விருப்பப்படும் மாணவர்கள், நேரடியாகக் கீழே காணும் முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்.

>http://www.nus.edu.sg/oam/apply/international/applications/WYA-applicationform.html

விவரங்களுக்கு, கீழே காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

>http://www.askadmissions.nus.edu.sg/.

என்கிறார் ராஜாராம்.

ராஜாராம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

17 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்