எதிரணி மீது இங்கிலாந்து இரக்கம் காட்டாது: கேப்டன் இயன் மோர்கன் எச்சரிக்கை

By இரா.முத்துக்குமார்

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-0 என்று வெற்றி பெறுவோம், எதிரணியினர் மீது இரக்கம் காட்ட மாட்டோம் என்று இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

2015 உலகக்கோப்பையில் மோசமான ஆட்டத்துக்குப் பிறகே இங்கிலாந்து அணி மோர்கன் தலைமையில் மீண்டும் எழுச்சி பெற்று ஏகப்பட்ட இருதரப்பு தொடர்களை வென்று வருகிறது.

இந்நிலையில் மொயின் அலியின் அரக்க இன்னிங்ஸினால் நேற்று மே.இ.தீவுகளை பந்தாடியது இங்கிலாந்து. அப்போது மோர்கன் கூறியதாவது:

நாங்கள் எதிரணிக்கு இரக்கம் காட்ட மாட்டோம், உறுதியுடன் ஆடி தொடரை 4-0 என்று கைப்பற்றுவோம். மேலும் வரும் போட்டிகளில் வலுவான இங்கிலாந்து அணியை, எதிரணிக்கு இரக்கம் காட்டாத இங்கிலாந்து அணியைப் பார்க்கலாம்.

இரு அணிகளுக்குமிடையே மொயின் அலிதான் நேற்று வித்தியாசம் ஏற்படுத்தினார். சிறிய மைதானமும் காரணம், அதனால்தான் 370 ரன்கள் வெற்றி இலக்கைக் கூட இங்கு வெற்றிகரமாக தடுப்பது சற்றே கடினம், ஆனால் பவுலர்கள் அபாரமாக வீசினர். குறிப்பாக கெய்ல் போன்ற அபாய வீரருக்கு நன்றாக வீசினர், பீல்டிங் நன்றாக அமைந்தது. பிளங்கெட் (5விக்) இந்தப் பிட்சிலிருந்து கூட நிறைய சாதகங்களை வெளிக்கொண்டு வந்தார், அவரை மிஸ்டர் ரிலையபிள் என்று அழைக்கலாம்.

எப்படியிருந்தாலும் வெற்றிதான் முக்கியம், என்றார் மோர்கன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்