இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் முதன்முறையாக ஆடும் அஸ்வின் முதல் போட்டியிலேயே 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வொர்ஸ்டர்ஷயர் அணியை குளொஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக வெற்றிக்கு இட்டுச் சென்று அசத்தினார்.
குழிபிட்ச் சூப்பர்ஸ்டார் என்ற தனது அடையாளத்திலிருந்து விடுபட அனைத்து மைதானங்களிலும் சிறப்பாக வீசும் முனைப்புடன் வொர்ஸ்டர்ஷயர் வாய்ப்பை பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வொர்ஸ்டர்ஷயர் அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் குளொஸ்டர்ஷயரை வீழ்த்தக் காரணமாக இருந்தார்.
மைதானத்தை விட்டு பெவிலியன் திரும்பிய போது ரசிகர்கள் எழுந்து நின்று அஸ்வினுக்கு கரகோஷம் செய்து பாராட்டினர்.
குளொஸ்டர்ஷயர் அணி 55/3 என்று தொடங்கியது, ஆனால் உடனேயே அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இந்த இன்னிங்சில் அஸ்வின் தொடக்க வீரர் கிறிஸ் டெண்ட், வில் டேவரே, ஜார்ஜ் ஹான்கிங்ஸ், ஜேக் டெய்லர், கெய்ரன் நொயிமா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். குளொஸ்டர்ஷயர் 211 ரன்களுக்குச் சுருண்டது.
பந்து வீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் 36 ரன்களையும் 2-வது இன்னிங்ஸில் 28 ரன்களையும் எடுத்ததோடு, முதல் இன்னிங்சிலும் 3 விக்கெட்டுகளை தன் பந்து வீச்சில் கைப்பற்றி அசத்தினார் அஸ்வின்.
அடுத்த முறை இந்திய அணி இங்கிலாந்து செல்லும் போது அஸ்வின் அங்கு சிறப்பாக வீசத் தயாராக இந்த கவுன்ட்டி அனுபவம் கைகொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
தமிழகம்
14 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
50 mins ago
சினிமா
35 mins ago
உலகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago