ஜம்மு: நடப்பு தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் மணிகா பாத்ரா இடம்பெற்று விளையாடி வரும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் போர்டு (PSPB) அணியை வீழ்த்தியுள்ளது தமிழ்நாடு அணி. 3-1 என்ற கணக்கில் அரையிறுதியில் இந்த வெற்றியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
யாஷினி மற்றும் கவுஷிகா என இருவரும் மணிகா பாத்ராவை வீழ்த்தியது தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடி அசத்தி இருந்தார் கவுஷிகா. அது மணிகா பாத்ராவுக்கு பின்னடைவாக அமைந்தது. 11-8, 9-11, 11-8, 7-11, 11-5 என கவுஷிகா வெற்றி பெற்றார். யாஷினி, ரீத் ரிஷ்யாவை வீழ்த்தினார். அதன் மூலம் தமிழ்நாடு 2-0 என முன்னிலை பெற்றது.
இருந்தும் அர்ச்சனா, காவ்யஸ்ரீயை வீழ்த்தினார். தொடர்ந்து மணிகா பாத்ராவை 11-6, 11-8, 11-8 என வீழ்த்தினார் யாஷினி. இதன் மூலம் 3-1 என தமிழ்நாடு வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மகளிர் பிரிவில் டெல்லி அணியை வீழ்த்தியுள்ளது ஆர்பிஐ அணி.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago