சப்-ஜூனியர் டேபிள் டென்னிஸ் தமிழகம் சாம்பியன்

By செய்திப்பிரிவு

ஆலப்புழா: மாநிலங்களுக்கு இடையிலான சப்-ஜூனியர் மற்றும் கேடட் பிரிவிலான 84-வது டேபிள் டென்னிஸ் போட்டியின் (15 வயதுக்குட்பட்டோர்) அணிப்பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள என்.சி.ஜான் நினைவு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 3-1 என்ற கணக்கில் அசாம் அணியை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றியது.

அணிப் பிரிவில் தமிழக வீரர் பி.பி. அபிநந்த், உமேஷ் குமார் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றனர். மாற்று ஒற்றையர் பிரிவில் அபிநந்த் 5-11, 11-6, 11-8, 8-11, 12-10 என்ற செட் கணக்கில் பிரியானுஜ் பட்டாச்சார்யாவை வென்றார். இதன்மூலம் 3-1 என்ற கணக்கில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது.

யு-11 பிரிவு இறுதிச் சுற்றில் மேற்கு வங்கத்தின் ரிஷன் சட்டபாத்யாய் 11-9, 9-11, 5-11, 12-10, 11-6 என்ற செட் கணக்கில் தமிழக வீரர் ஜே.என். அரவிந்த் சஞ்சயை வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்