ஆலப்புழா: மாநிலங்களுக்கு இடையிலான சப்-ஜூனியர் மற்றும் கேடட் பிரிவிலான 84-வது டேபிள் டென்னிஸ் போட்டியின் (15 வயதுக்குட்பட்டோர்) அணிப்பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள என்.சி.ஜான் நினைவு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 3-1 என்ற கணக்கில் அசாம் அணியை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றியது.
அணிப் பிரிவில் தமிழக வீரர் பி.பி. அபிநந்த், உமேஷ் குமார் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றனர். மாற்று ஒற்றையர் பிரிவில் அபிநந்த் 5-11, 11-6, 11-8, 8-11, 12-10 என்ற செட் கணக்கில் பிரியானுஜ் பட்டாச்சார்யாவை வென்றார். இதன்மூலம் 3-1 என்ற கணக்கில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது.
யு-11 பிரிவு இறுதிச் சுற்றில் மேற்கு வங்கத்தின் ரிஷன் சட்டபாத்யாய் 11-9, 9-11, 5-11, 12-10, 11-6 என்ற செட் கணக்கில் தமிழக வீரர் ஜே.என். அரவிந்த் சஞ்சயை வென்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
உலகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
5 hours ago