கோப்பை வென்றது இந்திய மகளிரணி

By பிடிஐ

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற 4 நாடுகள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது.

போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த் தியது. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 40.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக லஸ் 55 ரன்கள் எடுத்தார். ஜுலன் கோஸ்வாமி 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 33 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பூனம் ராவத் 70, மிதாலி ராஜ் 62 ரன்கள் எடுத்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது.

----------

அலெக்சாண்டர் ஜிவெரேவ் சாம்பியன்

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிப் போட்டி யில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை, வீழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஜிவெரேவ் சாம்பியன் பட்டம் வென் றார்.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 20 வயதான ஜிவெரேவ் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடிய 17-ம் நிலை வீரரான ஜிவெரேவ், ஜோகோவிச்சை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

18 mins ago

சுற்றுச்சூழல்

24 mins ago

தமிழகம்

34 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

54 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்