கடந்த ஐ-லீக் கால்பந்து போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஈஸ்ட் பெங்கால் அணியில் நியூஸிலாந்து வீரர் லியோ பெர்டோஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 2010 உலகக் கோப்பையில் நியூஸிலாந்துக்காக விளையாடியவரான பெர்டோஸுடன் 2 ஆண்டுகாலம் ஒப்பந்தம் செய்துள்ளது ஈஸ்ட் பெங்கால்.
அவர் எப்போது அணியில் இணைவார் என்பது தெரியவில்லை. ஆனால் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கவுள்ள கொல்கத்தா கால்பந்து லீக்கில் அவரை விளையாட வைப்பதற்கு அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு முன்னர் உலகக் கோப்பையில் விளையாடிய 3 வீரர்கள் ஈஸ்ட் பெங்கால் அணிக்காக விளையாடியுள்ளனர்.
தற்போதைய பெங்கால் அணியில் பெர்டோஸுடன் சேர்த்து உலகக் கோப்பையில் விளையாடிய இரு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். நைஜீரியாவைச் சேர்ந்த ரேன்டி மார்ட்டின்ஸ் மற்றொரு வீரர் ஆவார். 2003-ல் நடைபெற்ற நியூஸிலாந்து-ஈரான் அணிகள் இடையிலான நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட பெர்டோஸ், நியூஸிலாந்துக்காக 52 போட்டிகளில் ஆடியுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago