டேராடூன்: கடந்த 30-ம் தேதி கார் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார் ரிஷப் பந்த். இந்தச் சூழலில் விபத்தில் சிக்கிய தன்னை காத்தவர்களை மருத்துவமனைக்கு வரவழைத்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அண்மையில் நடந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்தபோது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடைபெற்றது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரிஷப் பந்த்தை முதலில் ரஜத் மற்றும் நிஷூ என்ற இருவர்தான் காரில் இருந்து மீட்டுள்ளனர். அதன் பிறகுதான் கார் தீப்பற்றி எரிந்துள்ளது. அவருக்கு மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் தன்னை மீட்ட ரஜத் மற்றும் நிஷூவை விபத்துக்கு பிறகு சந்தித்துள்ளார் பந்த். இந்த சந்திப்பு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. பந்த்தை டேராடூனில் இருந்து மும்பைக்கு மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago