திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அரவிந்தன் - கவிதா தம்பதியரின் மகள் ஹர்ஷினி (15). இவர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்ற பள்ளி அளவிலான செஸ் போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில் கலந்துகொண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
9 சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டியில் ஹர்ஷினி 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். ரஷ்யாவின் ஸ்ட்ராக் நோவா கரீனா 6.5 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார்.
இந்த வெற்றி குறித்து ஹர்ஷினி கூறும்போது, “நான் 2-ம் வகுப்பு முதல் செஸ் விளையாடி வருகிறேன். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ள சென்னையை சேர்ந்த ஆர்.பி.ரமேஷ் என்பவரிடம் பயிற்சி பெற்றுவருகிறேன். எதிர்காலத்தில் சர்வதேச மாஸ்டர் மற்றும் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதே லட்சியம்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 secs ago
வாழ்வியல்
9 mins ago
ஓடிடி களம்
19 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
54 mins ago
தொழில்நுட்பம்
58 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago