ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கொச்சியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி - கோவா எப்சி அணிகள் மோதின. 9-வது நிமிடத்தில் ஹார்லிசன் உதவியுடன் லூயிஸ் கோல் அடிக்க கோவா அணி 1-0 என முன்னிலை பெற்றது.
48-வது நிமிடத்தில் கோவா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி பெல்போர்ட் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. கடைசி நிமிடத்தில் வினித் அற்புதமாக கோல் அடிக்க கேரளா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கேரளா அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது.
தொடரில் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 secs ago
வாழ்வியல்
9 mins ago
தமிழகம்
3 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
36 mins ago
ஓடிடி களம்
53 mins ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago