“அந்தப் பையனுக்கு பயம் இல்ல. அவனலாம் அப்படியே போவ உட்றணும்” என ‘பொல்லாதவன்’ படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனம் என்னவோ இயக்குநர் வெற்றிமாறனின் கற்பனைதான். ஆனால், அதற்கு அப்படியே கச்சிதமாக பொருந்திப் போகிறவர்களில் ஒருவர் என்றால், அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான். அந்த அளவுக்கு கிரிக்கெட் களத்தில் பயமே இல்லாமல் பந்தை காட்டடி அடித்து துவம்சம் செய்யும் வல்லமை படைத்தவர் அவர். இன்று அவருக்கு பிறந்தநாள்.
கிரிக்கெட் பந்தை ஈவு இரக்கமின்றி அடித்து, ரன் குவிக்கும் வீரர்களில் ஆல்-டைம் ஃபேவரைட் என்றால் அது சேவாக் தான். அப்படித்தான் வரலாறும் இருக்கிறது. இந்த டொக்கு வைத்து ஆடுவது எல்லாம் அவருக்கு பிடிக்காது. அவர் அடித்தால் அது டக்கர் என்ற ரகத்தில் இருக்கும். இன்று டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுவதை 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் செய்து கொண்டிருந்தவர்தான் சேவாக்.
அவர் ஆடும் ஸ்கொயர் கட், அப்பர் கட், லேட் கட் போன்ற ஷாட்டுகள் எல்லாம் அதிரிபுதிரி ரகமாக இருக்கும். அதை என்றென்றும் சேவாக் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அன்-ஆர்தடாக்ஸ் ஷாட்களை ஆடுபவர் என வர்ணனையாளர்கள் சேவாக்கை சொல்வது வழக்கம்.
அவரது சாதனை துளிகள் சில…
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago