ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகளிடையே நேற்று நடந்த ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் சென்னை மோதியது புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த கொல்கத்தா அணியும், 6-வது இடத்தில் இருந்த சென்னை அணியும் இப்போட்டியில் வென்று முதல் 4 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதற்காக ஆட்டத்தின் ஆரம்பம் முதலே கோல் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின.
39-வது நிமிடத்தில் பிரீதம் கோட்டல் பாஸ் செய்து கொடுத்த பந்தை கோலாக மாற்றிய கொல்கத்தா வீரர் மார்கஸ் போஸ்டிகா, தனது அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தின் இறுதியில் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலையில் இருந்தது.
2-வது பாதி ஆட்டத்தில் 79-வது நிமிடத்தில் சென்னை வீரர் சுகி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதன்பிறகு 2 அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago