ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் எப்சி புனே சிட்டி - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல்கள் ஏதும் அடிக்கப்படவில்லை. ஆட்டம் முடிவடைய ஒரு நிமி டங்கள் மட்டுமே இருந்த நிலை யில் புனே வீரர் லைன்ங்டோஹ் கோல் அடித்து அசத்தினார். மும்பை அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது.
முடிவில் புனே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் புனே அணி 4-வது இடத்துக்கு முன்னேறியது. தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எப்சி - எப்சி கோவா அணிகள் மோதுகின்றன.
9 ஆட்டத்தில் விளையாடி உள்ள கோவா 7 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி 8 ஆட்டத்தில் பங்கேற்று 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
கல்வி
21 mins ago
ஆன்மிகம்
38 mins ago
ஆன்மிகம்
46 mins ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago