இளம் மல்யுத்த வீரர்களை உருவாக்குவதற்காக மல்யுத்த பயிற்சி மையத்தை தொடங்க உள்ளதாக சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றவர் சாக்ஷி மாலிக். இவர் மல்யுத்த பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அம்பாலாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
என் திருமணத்துக்கு பிறகும் மல்யுத்த போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொள்வேன். மல்யுத்த வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க தேசிய அளவிலான மல்யுத்த பயிற்சி மையத்தை விரைவில் தொடங்கவுள்ளேன். இதன்மூலம் பல இளம் மல்யுத்த வீரர்களை உருவாக்குவேன்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் படுவது வருத்தமளிக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
11 hours ago