வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘கியாந்த்’ புயலால் இந்தியா - நியூஸிலாந்து அணிகளிடையே யான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்தியா - நியூஸிலாந்து அணிகளிடையே 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற் றுள்ளன. கடைசி ஒருநாள் போட்டி 29-ம் தேதி (நாளை) விசாகப் பட்டினத்தில் நடக்கவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் போட்டிக்கான டிக்கெட் கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண் டுள்ள ‘கியாந்த்’ புயல் நேற்று வலு விழந்ததால், நெல்லூர் - சென்னை இடையே 30-ம் தேதி கரையைக் கடக்கும் என விசாகப்பட்டினம் வானிலை ஆராய்ச்சி மையம் தெரி வித்துள்ளது. இதன் காரணமாக இன்றுமுதல் தொடர்ந்து 3 நாட் களுக்கு கடலோர ஆந்திரா, மற்றும் சென்னையின் கடலோர பகுதி களில் மழை பெய்யும் என்று கூறப் படுகிறது. இந்த மழை காரணமாக இந்தியா - நியூஸிலாந்து அணிக ளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
இலக்கியம்
5 hours ago
தமிழகம்
43 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago