“ஊடகங்கள் சொல்வது பொய்” - மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான எதிர்காலம் குறித்து ரொனால்டோ

By செய்திப்பிரிவு

மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியுடனான தனது எதிர்காலம் குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தெரிவிப்பதாக கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஊடகங்கள் பொய் சொல்லி வருவதாகவும் அவர் குறைகூறியுள்ளார்.

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. 37 வயதான அவர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர். தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021-இல் இரண்டு ஆண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தது மான்செஸ்டர் யுனைடெட்.

2022-23 ப்ரீமியர் லீக் தொடரில் அந்த அணி லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. அதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது அந்த அணி. இந்தச் சூழலில் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான எதிர்காலம் குறித்து பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக எதிர்வரும் செப்டம்பர் 1-ம் தேதி அன்று நிறைவு பெறவுள்ள சம்மர் டிரான்ஸ்ஃபர் விண்டோ நிறைவு பெறுவதற்குள் ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஐரோப்பிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கு தான் தற்போது ரியாக்ட் செய்துள்ளார் ரொனால்டோ.

“இது தொடர்பான உண்மை என்னவென்று அடுத்த இரண்டு வாரங்களில் வெளிச்சத்திற்கு வரும். இந்த விவகாரத்தில் ஊடகங்கள் பொய் சொல்லி வருகிறது. என்னிடம் உள்ள நோட்டுப் புத்தகத்தில் கடந்த சில மாதங்களாக என்னை குறித்து வெளிவந்துள்ள 100 செய்திகளில் வெறும் 5 தான் சரியானவை” என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் உண்மையை சொல்ல எதற்கு இரண்டு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். இப்போதே சொல்லலாம் என ரொனால்டோவின் சக கிளப் அணி வீரர் நெவல்லே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்